top of page
Search

சி.பி.ஐ. விசாரணை! அனுமதியைதிரும்ப பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 14, 2023
  • 1 min read
ree


தமிழ்நாட்டில் இனி CBI விசாரணைக்கு கடிவாளம் போட்ட தமிழ்நாடு அரசு!


ஒன்றிய அரசின் சி.பி.ஐ.(மத்திய புலனாய்வுத்துறை, இனி விசாராணை விசாரணை செய்வதற்கு

முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம்: தமிழ்நாடு அரசு அதிரடி


சென்னை: தமிழ்நாட்டில் இனி சி.பி.ஐ. (புலனாய்வுத்துறை) விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ree

டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் கீழ் 1989, 1992-ம் ஆண்டுகளில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த தமிழ்நாடு அனுமதி வழங்கியிருந்தது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.


மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

ree

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page