முதல்வர் மு.க.ஸ்டாலின் டைரி! தொழில் முதலீடுகளை பெற்று வரும் அனுபவம்! தமிழர்களுக்கு ஓர் கடிதம்!!
- உறியடி செய்திகள்

- May 31, 2023
- 1 min read


மணவை எம்.எஸ்.ராஜா....
சிங்கப்பூர்-ஜப்பான் பயண அனுபவங்களைப் பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொண்ட பயண அனுபவங்களை சிறு டைரி குறிப்பாக பொதுமக்களுடன் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்!
இது தொடர்பாக கட்டுரையில் பதிவிட்டுள்ள அவர்,...
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன்.
என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன் எனப் பதிவிட்டு, பயண அனுபவங்களை குறிப்புகளாகப் பகிர்ந்துள்ளார்.
அதில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது!

மே 23 செவ்வாய்: 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் - ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மை நோக்கம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

மே 24 புதன்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைத் தனித்தனியாக சந்தித்தேன்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மே 25 வியாழன்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று தமிழர்களுடன் தேநீர் அருந்தியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தேன்.
மே 26 வெள்ளி: ஒசாகாவில் டைடல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஒசாகா முதலீட்டாளர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.
கோமாட்சு பிரமாண்ட தொழிற்சாலைக்குச் சென்றேன்.

மே 27 சனிக்கிழமை: ஒசாகா கோட்டையை சுற்றிப்பார்த்தோம்.
தி இந்தியன் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவில் பங்கேற்றோம்.




மே 28 ஞாயிறு: ஒசாகாவிலிருந்து டோக்கியோவிற்கு இரண்டரை மணிநேரத்தில் 500 கி.மீ. புல்லட் ரயில் பயணம் மேற்கொண்டேன்.
மே 29 திங்கள்: ஜப்பான் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடி சந்திப்பு நடைபெற்றது.

மே 30 செவ்வாய்: என்இசி எதிர்கால தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனங்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன்.
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன்.
இவ்வாறாக அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு சென்னை திரும்பினார்
முதலீடுகளை ஈர்க்கவும், மூதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு உலக முதலீட்டார்களை ஈர்க்க அரசு பயணமாக சென்று விட்டு, அரசு பயணத்தை முடித்து தமிழ்நாடு (சென்னை) திரும்பினார். தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சராம்




Comments