முதல்வர் ஸ்டாலின் வருகை! நாகை, திருவாரூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Aug 23, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.!
தி.மு.கழக வட்டராத்தில் வெளியாக தகவல்கள் பின்வருமாறு!
விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து சாலை மாா்க்கமாக திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்லவுள்ளாா்.
சென்னையில் இருந்து ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து இரவு நாகை செல்கிறார்.!

திருக்குவளையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்கிறார் மற்றும் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் !
முதல்வரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 26-ஆம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 27-ஆம் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்புகிறார்.!
இவ்வாறாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




Comments