ஈரோடு,பயனாளிகளுக்கு வேளாண் உபகரங்கள்! அமைச்சர்கள் நேரு, முத்துசாமி வழங்கி - பணிகள் குறித்தும் ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Sep 4, 2023
- 1 min read
Updated: Sep 5, 2023

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா...
ஈரோட்டில் அமைச்சர் நேரு, முத்துசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கி - பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டபின், திருப்பூர் படியூரில் நடைபெறவுள்ள தி.மு.கழக,பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள்.!
தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி பொருப்பேற்ற காலம் முதல் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு துறைகளில். மிக முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு தனியாக பட்ஜெட் அறிவித்து அதனை நடைமுறைபடுத்தி வருதும், இதன் உச்சமென்றே அனைத்துத்தரப்பு மக்களாலும் பாராட்டி வரவேற்கப்பட்டு வருகிறது!.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி வேளாண்மை பொறியியல் துறை சார்பாக ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை இயந்திரமாக்கல் உபய இயக்க திட்டம் 2023-24 கலைஞர் திட்ட கிராமங்களுக்கு பவர் டில்லர், பவர் வீடர் வழங்கும் விழா.நேற்று செப் 4-ந் தேதி
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது.!

விழாவில், தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ,மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேளாண்உபகரனங்கள் வழங்கினார்கள்.!

முன்னதாக மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசுத்துறை திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்டத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் உரிய ஆலோசனைகள் - வழிகாட்டல்கள் எடுத்துக் கூறினார்கள்.!
அமைச்சர்
மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஈரோடு மாநகராட்சி மேயர் . நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் V. செல்வராஜ் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர்தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். ஆலோசனைகளின்படி திருப்பூர் மாவட்டம் படியூரில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு.சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து தி.மு.கழக நிர்வாகிகளுடன்
.ஆலோசனை செய்து, அறிவுறுத்தல்கள் -ஆலோசனைகளும் வழங்கினார்கள்.!
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்!




Comments