top of page
Search

ஈரோடு இடைத்தேர்தல். 238 வாக்குச்சாவடிகளில் 1.430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 24, 2023
  • 1 min read
ree


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 238 வாக்குச்சாவடிகளில் 1,430 . வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை மாலை 5 மணியோடு தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ. 64.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், ரொக்கமாக ரூ 51.31 லட்சமும், ரூ. 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், பரிசு பொருட்கள் உட்பட மற்றவை ரூ. 1.33 லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் பரப்புரை 25 ஆம் தேதி மாலையுடன் நிறைவடையும். வெளியூர்களில் இருந்து சென்றிருக்கும் அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,430 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 310 விவிபிடி இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது.வாக்குசாவடியில் மட்டும் 1206 தேர்தல் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page