ஈரோடு எவமலையில், கோவில் புனரமைப்பு பணி! அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கிவைத்து அதிகாரிகளுக்கு ஆலோசனை!!
- உறியடி செய்திகள்

- Nov 20, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா...
ஈரோடு மாவட்டம். எவமலையில்,பொதுமக்கள் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கட்டுமானப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் பங்கேற்பு...
தமிழக சட்டமன்ற கூட்டதொடரில் 2021-22 ஆம் ஆண்டு, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் எலவமலை கிராமம் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தரைத்தளம் மற்றும் மதில் சுவர் அமைக்கும் திருப்பணிக்கு ஆணையர் பொது நிதியில் இருந்து 23 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது இதற்கானப் பணி துவக்கம் இன்று தொடங்கியது, இதில் ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி நேரில் கலந்துகொண்டு அடிகால் நாட்டிப் பணிகளை தொடங்கிவைத்தார்...

பின்னர் சம்மந்தபட்ட துறை-மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம், பணியை விரைந்து உரிய தரத்துடன், பக்கதர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தி ஆலோசனைகளை வழங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி, பவானி நகர, தி.மு.கழக செயலாளர் .ப.சீ.நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தி.மு. கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்....




Comments