தருமபுரியில் புதிய அரசு கட்டிடம் திறப்பு- அதிகாரிகளுடன்அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆலோசனை!!
- உறியடி செய்திகள்

- Nov 18, 2022
- 1 min read

தருமபுரியில், புதிய அரசு கட்டிடத்தை திறந்துவைத்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் வழங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்......
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு மக்கள் நல வளர்ச்சி திட்டப் பணிகளும், பருவமழை பாதிப்புகள் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு, தமிழக அமைச்சர்கள் இதில் தீவிர பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.........

இந்நிலையில்,தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையின் மூலம் ஒப்படைக்கப்பட்ட வருவ வாய்நிதி (2020 - 2021) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சிகளுக்கான வளமைய திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தின், புதிதாக கட்டப்பட்ட, கட்டிடத்தினை இன்று நவ.18. வெள்ளிக்கிழமை, தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர். கடலூர் மாவட்ட செயலாளர், தமிழக வேளாண் -. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்,........

இதனை தொடர்ந்து குத்து விளக்கை ஏற்றிவைத்து, கருணை அடிப்படையில் சதீஸ் என்பவருக்கு பணி நியமன உத்தரவை வழங்கினார். இதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளிடத்தில்தொடர்ந்து, வேளாண் - உழவர் நலத்துறை உள்ளிட்ட, பிற அனைத்து துறையின் பணிகள் குறித்தும், அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளையும், வழங்கி, மக்கள் நலத்திட்டங்களை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், பருவமழை தொடர்பான முன்னெச்சரிச்சை. நடவடிக்கைகள், நிவார. பணிகளின் நிலவரங்களையும் கேட்டறிந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் அனைத்துத்துறை அலுவல், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருதாகவும், அரசு அதிகாரிகள், மக்கள் பணியில் எவ்வித பின்னடைவிற்கும் இடமளிக்காதவகையில் முனைப்புடன் பணியாற்றவும் கேட்டுகொண்டார்...

மாவட்ட ஆட்சியர் சாந்தி, ப எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாவட்ட திட்ட அலுவலர், தீபனா விஷ்வேஸ்வரி, முன்னால் எம்.எல்.ஏ. பெ.சுப்பிரமணி. முன்னால் அமைச்சர்.பி.பழனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.




Comments