top of page
Search

தீவிரமடையும் மோக்கா புயல்! மீனவர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வலியுத்தல்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 12, 2023
  • 1 min read
ree

மணவை, எம்.எஸ்.ராஜா....


மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்!


மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14 வரை செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிக்கையில்,

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அழ்ந்த காற்றழுத்த மண்டலம் தீவிர புயலாக மாறி கடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இது மேலும், அதி தீவிர புயமாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13ம் தேதியன்று சற்று வலுவிழந்து 14ம் தேதியன்று 120 – 145 கி.மீ. / மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ree

தி.மு.கழகத் தலைவர்தமிழ்நாட்டின் முதல்வர். தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படியாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் , கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page