top of page
Search

பா.ஜ.க.வில் தவறு செய்பவர்கள் தப்ப முடியாது! யாரும் விதிவிலக்கல்ல!!அண்ணாமலை பேட்டி!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 23, 2022
  • 1 min read
ree

பா.ஜ.க.விலிருந்து நடிகை ஒருவர் மீதும், திருச்சி சூர்யா சிவா மீதும் ஒழுங்கு நடவடிக்கையினை, அண்ணாமலை மேற்கொண்டார் அதன் பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தவறு செய்தவர்கள் யாராகயிருந்தாலும் கடும் கட்சி நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று கூறினார்........


சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிகழச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது.........


தமிழகத்தில். சிறுகுறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு,சிறிய தொழில்களை தொடங்கி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்............


பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள், சரியாக செயல்படாதவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள.

கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்கப்பட உள்ளது............

ree

தவறு செய்தவர்கள் யாரையும் விடப் போவதில்லை. நாணயத்தின் இரண்டு பக்கமும் பார்ப்பதைப்போல், இதில் பார்க்கவேண்டி உள்ளது. இது குறித்து இரண்டு தரப்பும் விசாரணையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...........


தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று கருத முடியாது. கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகையை தாண்டக்கூடிய அனைவரும் மீதும் தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இதில் எவரும் விதிவிலக்கல்ல.


தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது, எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம் அது கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பாடாக தான் இருக்கும் . கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது .

பாஜகவோடு டிடிவி தினகரன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன, அதற்கான உரியகாலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது .

தேசிய ஜனநாயக கூட்டணி

பொறுத்தவரை அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது. மேலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக அதற்கான ஒரு சிஸ்டம் செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page