புதுக்கோட்டை:அடிப்படை வசதிகள்,வளர்ச்சிப்பணிகள்விரைந்து முடிக்கப்படும்!அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!!
- உறியடி செய்திகள்

- May 2, 2023
- 1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் அடிப்படை வசதிகள், வளர்ச்சித்தித் திட்டப் பணிகள் விரைந்து நிறைவேற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.
தமிழக முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை - வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
விழாவில்
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் தளபதியாரின் தலைமையில். கழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் பொதுமக்களின் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. முதல்வர் தளபதியாரின் உத்தரவுப்படி, நபார்டு 2021-22 திட்டத்தின்கீழ், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஆற்றங்கரை - வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணி அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி நிறைவேற்றி உள்ளார்கள்.
மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள், விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இவ்வாறுஅமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்....

வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,முன்னாள் அரசு வழக்கறிஞர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, கோட்டப் பொறியாளர் நபார்டு வி.செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் சி.நளினி, மா.தமிழய்யா, வெ.முத்துக்கிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் மா.பரமசிவம், கோ.அருணாசலம், உதவிப் பொறியாளர் நபார்டு ராஜதுரை, எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தி.மு.கழக, கூட்டணி கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்...




Comments