top of page
Search

தங்கமணி இரட்டை இலை சின்னமில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற தயாரா? புகழேந்தி சவால்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 6, 2022
  • 1 min read
ree

முன்னால் அமைச்சர் தங்கமணி, இரட்டை இலை சின்னம் இல்லாமல் சுயேட்சையாக

போட்டியிட்டு, வெற்றிபெற முடியாது!

அதிமுக முன்னால் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவால்!!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னால் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். எடப்பாடியை இயக்குவதே இவர்கள்தான் . தங்கமணிக்கு முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா?

ree

ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா?

இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் அனைவருடனும், இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார்......


எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.....


டிசைன்லே இருந்தா என்ன செய்ய?


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page