விழப்புரம்: முதல்கட்ட ஆயிரம்பேர் தி.மு.க.வில் இணைந்த படிவங்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைப்பு
- உறியடி செய்திகள்

- Apr 24, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை.எம்.எஸ்.ராஜா...
விழப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம், முதல்கட்டமாக ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு படிவம் ஒப்படைப்பு! விரைந்துப் பணியாற்ற அமைச்சர் அறிவுறுத்தல்!!
தி.மு.கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தி.மு.கழகத்தில் ஒருகோடிபதியஉறுப்பினர்சேர்க்கை இலக்கைநோக்கிய ,தி.மு.கழகத்தினர் பணிகள் தமிழகம் முழுவதும், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைப்படி முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதன்படி விழப்புரம்,மரக்காணம்மேற்குஒன்றியதி.மு.கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ஓராயிரம்உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதன் உறுப்பினர் படிவங்களை
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சமஸ்தானிடம் நிர்வாகிகள்வழங்கினார்கள்.
ஒன்றிய துணை பெருந்தலைவர் ஒன்றிய தி.மு. கழக செயலாளர் பழனி
தலைமை கழக திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவ_ஜெயராஜ்
மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்
ஒன்றிய பெருந்தலைவர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தயாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் படிவங்களை நேரில் வழங்கினார்கள்.
தி.மு.கழக வளர்ச்சியில், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், கழகத் தலைவர் தளபதியாரின் உத்தரவுப்படியும், கழக மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளின்படியும், உறுப்பினர் சேர்க்கைப் பணியில் தீவிரம் காட்டி பணியாற்றியவர்களை பாராட்டியும், தொடர்ந்து முனைப்புடன் செயல்படவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனைகளை வழங்கினார்...




Comments