5. ஆண்டுகளுக்கு பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்! தேர்தல் நாடகம்! அமைச்சர் ரகுபதி பேட்டி!
- உறியடி செய்திகள்

- Mar 5, 2024
- 1 min read

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம், அறிவிக்கப்பட்டு 5. ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்குவதாக கூறுவதுதேர்தலுக்கான நாடகம், தேர்தலுக்கு பின்னர் இவை நிறுத்தப்பட்டு விடும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!.
நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.!,
தமிழ்நாட்டில், தி.மு.கழகத்தலைமையில் ஆட்சி பொருப்பேற்றது முதல்,போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க முதல்வரின் உத்தரப்படி, உடனுக்குடன் உரிய கடும் நடவடிக்கை பாரபட்சமின்றி சம்மந்தப்பட்டவர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.!
இந்திய ஒன்றியத்தில் குஜராத்தில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என்பது நாடறிந்த உண்மையாகும்!.

தமிழ்நாட்டில் அமைதியான தி.மு.கழகத்தலைவர், முதல்வர் தளபதியார் தலைமையிலான எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் வகையில்,திராவிட மிடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,!
இந்நிலையில் தங்களின் மலிவுஅரசியலை கொண்டு யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது.!
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டதும் பாஜகதான்.!
தேர்தலுக்காக வாய்க்கு வந்ததை, பேசி அரசியல் செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு மீது பிரதமர் 8 பழிபோடுவதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.! முதல்வர் தளபதியாரின் தலைமையில், கழக அரசு, தொடர்ந்து போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உறுதிபூண்டு செயல்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறோம்.!
கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.போதைப்பொருள் வழக்குகளில் 80, சதவிகிதத்தி க்கும் மேல் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.!
தமிழ்நாடு அரசு. போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 16 பேரை கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது பாஜக. போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள குஜராத்தில் முதலில் போதைப்பொருளை பாஜக தடுக்கட்டும். தேர்தலின்போது எய்ம்ஸ் வரும், தேர்தல் முடிந்தபிறகு எய்ம்ஸ் போய்விடும். தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.!
குற்றப் பின்னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் ஒருபோதும் திமுகவிற்கு இல்லை. குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர், போதைப்பொருள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது.!
ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார்
இவ்வாறாக அமைச்சர் ரகுபதி கூறினார்.! .




Comments