top of page
Search

அண்ணாமலை கண்டுபிடிப்பு! அதிமுக,வில் தலைவர்கள் சரியில்லை! எதிர்கட்சியாகவும் செயல்படவில்லை!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 5, 2024
  • 1 min read
ree

அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.!


விழுப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது.!


அப்போது அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார், என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்குப் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான்.!

ree

அவரை பிரதமர் அழைத்துச் சென்று டெல்லியில் அவருக்கு அருகிலேயே அமரவைத்தார். ஆனால், அவர் தமிழகம் திரும்பியதும் சுய லாபத்துக்காக, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற எண்ணத்தில், பாஜக வேண்டாம் என்று கூறி ஒதுங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி.!


அதற்கு மக்கள் அவருக்கு என்ன பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் அவர்கள் கட்சிக்கு டெபாசிட்டை இழக்கச் செய்தனர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், இவ்வளவு பெரிய ஒரு அரசியல் கட்சி, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த கட்சி, இத்தனை இடங்களில் டெபாசிட் இழந்தது என்பதற்கான கின்னஸ் சாதனையை தான் செய்துள்ளது.!


அதற்கு காரணம், அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, அதில் தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். கோவைக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம் .எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.!

அதை எப்போது நிறைவேற்றுவார்.!


தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டது, அதனால், அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறியிருக்கிறார்.!


2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலையே புறக்கணிக்குமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்புகிறேன். தேர்தலைப் புறக்கணிப்பதற்கு புதுப்புது காரணங்களைக் கண்டுபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவில்லை என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்,!இவ்வாறு அவர் கூறினார்.!


முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக என்ற கட்சி அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் ஜெயக்குமார். அவருடைய சொந்த ஊரிலேயே அவருடைய மகன் டெபாசிட் இழந்திருக்கிறார். அவர் நான் லண்டனுக்கு படிக்கப் போவது குறித்து பேசலாமா?


என்று விமர்சனம் செய்தது குறிப்பிடதக்கது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page