top of page
Search

சட்டமன்ற தேர்தல் பணி! 40 க்கு 40 பெற்றதைப்போல் இன்றே தொடங்குவோம்! கனிமொழி கருணாநிதி, பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 20, 2024
  • 5 min read
ree

மக்களவை தேர்தலில் 40 க்கு 40 ம் வெற்றிப்பெற்றதைப் போல 2026 , சட்டமன்ற தேர்தல் பணிகளை இன்றே தொடங்குவோம் என்று, கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.


தென்­காசி மாவட்­டம், மேல­நீ­லி­த­நல்­லூர் கிழக்கு ஒன்­றிய தி. மு.கழ­கத்­தின் சார்­பில் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு நிறைவு விழா, 40/40 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்றி விழா மற்­றும் வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி அறி­விப்பு பொதுக்­கூட்­டம், குருக்­கள்­பட்­டி­யில் முப்­பெ­ரும் விழா­வாக நடை­பெற்­றது. இதில், தி.மு.கழக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ர், தி.மு.கழக. நாடா­ளு­மன்­ற இரு அவைக் குழு தலை­வ­ரு­மான கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி, எம்.பி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.!


அப்போது கனி­மொழி கரு­ண­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது ....

ree

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் முத­ல­மைச்­சர் தள­பதி கலந்து கொண்ட நன்றி தெரி­விக்­கும் கூட்­டம் கோவை­யிலே இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால் மிகச் சிறப்­பாக நடந்தது.


அங்கு பேசிய அனைத்­துக் கட்சி தலை­வர்­க­ளும், நமது கூட்­டணி கட்சி தலை­வர்­க­ளும் நாம் பெற்­றி­ருக்­கக் கூடிய இந்த 40 க்கு 40 வெற்றி என்­பது இந்­தி­யாவையே திரும்­பிப் பார்க்­க வைத்த, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின், திராவிட மாடல் நல்­லாட்­சிக்கு கிடைத்த சான்று என்­றும்.., அதே நேரத்­தில் எந்த நேரத்­தி­லும் நமது கொள்­கை­களை விட்­டுக் கொடுக்­கா­மல் ஒரு போராட்ட குணத்­தோடு நின்று பா.ஜ.க.வை, அதன் பிரி­வினை வாத கொள்கைகளை எதிர்த்து கொண்­டி­ருக்­கி­றோம், அதற்கு கிடை த்­தி­ருக்­கக் கூடிய வெற்றி என்­ப­தை­யும் மிகத் தெளி­வாக எடுத்­து­ரைத்­தார்­கள்.


வேறு எந்த மாநி­லத்­தி­லும் பெற முடி­யாத வெற்றி தமிழ்­நாட்­டுக்கு கிடைத்­தி­ருக்கும் வெற்றி. அதை­விட குறிப்­பிட்­டுச் செல்ல வேண்­டும் என்­றால் ஒன்­றிய பி.ஜே.பி.யால் வெற்றி பெற்­றி­ருக்­கக் கூடிய சூழ்­நிலை உரு­வாகி இருந்­தா­லும், அந்த வெற்றி என்­பது ஒரு தோல்­வியை போன்ற வெற்றிதான்.

ree

இந்­தியா கூட்­டணி ஆட்சி பொறுப்­புக்கு வர­வில்லை என்­றா­லும் இந்த நாடே நம் வெற்­றி­யைக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றது, இந்த உல­கமே கொண்­டாட கூடிய ஒரு வெற்­றி­யாக இந்­தியா கூட்­ட­ணி­யின் வெற்றி இந்த தேர்தலில் அமைந்­தி­ருக்­கி­றது.


கடந்த 10 ஆண்­டு­க­ளில் பா.ஜ.க. இந்த நாட்­டுக்கு என்ன செய்­தி­ருக்­கி­றது என்­பதை நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். பிர­த­மர் தான் கொடுத்த ஒரு வாக்­கு­று­தி­யை­யா­வது நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றாரா? பதி­னைந்து லட்ச ரூபாய் உங்­கள் அக்­க­வுண்­டில் போடு­கி­றேன் என்­றார், கருப்பு பணத்தை ஒரே நாளில் ஒழித்து விடு­வேன் என்­றார், விவ­சா­யி­க­ளின் வரு­மா­னத்தை இரட்­டிப்­பாக்கி தரு­வேன் என்­றார்.!


இதில் எதை­யுமே நிறை­வேற்­றாத ஒரு­வர்­தான் நரேந்­திர மோடி.! அவர்­கள் செய்­தது ஒரே ஒரு சாதனை. அதை நடத்­தி­விட்­டால் இந்த நாடே திரண்டு வந்து தங்­க­ளுக்கு வாக்­க­ளித்து விடும் என்று கனவு கண்டு கொண்­டி­ருந்­தார்­கள். அது­வும் தமிழ்­நாட்­டி­லி­ருந்து இல­வ­ச­மாக பஸ், ரயில்கள் கூட விட்­டார்­கள். ஒரு­வேளை விமா­னம் கூட விட்­டி­ருக்­க­லாம் எனக்கு தெரி­ய­வில்லை.!

ree

அயோத்­தி­யில் கோவிலை திறக்­கக்­கூ­டிய நேரத்­திலே எல்­லோ­ரை­யும் விட அங்கே இருக்­கக்­கூ­டிய எல்­லா­வற்­றை­யும் விட முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது பிர­த­மர் நரேந்­திர மோடியைத்தான். அத­னால்­தான் என்னவோ. தேர்­தல் நேரத்­திலே நான் சாதா­ரண மனி­தன் அல்ல நானே கட­வுள் என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு பிரச்­சா­ரத்தை அவர் மேற்­கொண்­டார் போலும்.!


நான் கேட்­கி­றேன், ’நானே கட­வுள். என் காலில் விழுந்து எல்­லா­ரும் கும்­பி­டுங்­கள்’ என்று உங்­கள் ஊரில் யாரா­வது சொன்­னால் நீங்­கள் எல்­லாம் என்ன சொல்­வீர்­கள்? இதற்கு மேல் நான் எது­வும் சொல்­வ­தற்­கில்லை. இப்­ப­டிப்­பட்ட ஒரு பிரச்­சா­ரத்தை கையில் எடுக்­கக்­கூ­டிய சூழ­லுக்கு செயலற்ற தன்மையால் அவர் தள்­ளப்­பட்­டார்.!

ree

கோவில் கட்­டு­வதோ, சர்ச் கட்­டு­வதோ, மசூதி கட்­டு­வதோ ஒரு அர­சாங்­கத்­தின் வேலை அல்ல. அதெல்­லாம் மக்­க­ளுக்கு தெரி­யும். அர­சாங்­கம் ஆட்சி நடத்த வேண்­டும். மக்­க­ளுக்­கான பணி­களை செய்ய வேண்டும். இது எதை­யுமே செய்­யா­மல் மக்­களை மதத்­தின் பெய­ரால் மட்­டுமே ஏமாற்றி ஆட்­சி­யைப் பிடித்து விட முடி­யும் என்ற கன­வில்­தான் தேர்­த­லுக்கு முன் நானூறு இடங்­களை வெற்றி பெறு­வோம் என்று பிர­த­மர் கூறி­னார்.!


தேர்­தல் முடி­வில் இந்­திய மக்­கள் எந்த இடத்­தில் அவர்கள் இருக்க வேண்­டும் என்ற இடத்தை காட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.!


அதை­விட நான் பெரு­மை­யோடு சொல்­லிக் கொள்­கி­றேன்... தமி­ழக மக்­கள் தாமரை இங்கே மல­ரவே மல­ராது என்று அவர்­களை ஒதுக்­கித் தள்ளி விட்­டார்­கள்.!

ree

இன்­னொ­ரு­வர் கோயம்­புத்­தூ­ரில் வேட்­பா­ள­ராக நின்­றார். அவர் பிரச்­சா­ரத்­தில் என்ன சொன்­னார்? தென் தமி­ழ­கத்­தில் ஒரு சீட்டு கூட தி.மு.க. கூட்டணி ஜெயிக்க முடி­யா­கு என்று சவால் விட்டார். அவர் எதைச் சொன்­னா­லும் இதை நான் சாதா­ர­ண­மாக சொல்­ல­வில்லை ஆய்ந்து சொல்­லு­கி­றேன் என்று சொல்­லு­வார். ஏனென்­றால் மெத்­தப்­ப­டித்த அதி­காரி இல்­லையா அவர்? இங்கே கூட அதே போல் அதி­கா­ரி­கள் நின்று கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் அப்­படி பேசு­வ­தில்லை.!


அத­னால் அவர் தனக்கு எல்­லாமே தெரி­யும் தென் தமிழ் நாட்­டில் திமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று பேசி­னார். வாய்ப்பு இல்­லா­மல் போனது யாருக்கு என்­பது உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும்.!


ஏனென்­றால் தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு அர­சாங்­கத்­தின் பணி என்ன என்­பதை புரிந்து கொண்­டி­ருக்­கக் கூடி­ய­வர்­கள். திரா­விட இயக்­கம் காலம் கால­மாக மக்­கள் அறி­வாற்­றல் பெற்­ற­வர்­க­ளாக இருக்க வேண்­டும், அறி­வி­யல் புரிந்­த­வர்­க­ளாக இருக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் தான் ஆட்சி நடத்­து­கி­றது.!


பிர­த­மர் தமிழ்­நாட்­டுக்கு திரும்­பத் திரும்ப பல முறை வந்­தார். பல்­வேறு விஷ­யங்­களை சொன்­னார். ஆனால் தமிழ்­நாட்­டுக்கு வந்த போது நான் தான் கட­வுள் என்று சொல்­ல­வில்லை. ஏனென்­றால் அப்­படி சொன்­னால் தமிழ்­நாட்­டில் சிரித்­துக் கொண்­டி­ருப்­பார்­கள் என்று அவ­ருக்­குத் தெரி­யும்.


மோடி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அத்­த­னைக்­கும் தமிழ்­நாடு இன்று பாடம் புகட்­டி­யி­ருக்­கி­றது. ஆட்சி என்­றால் மக்­க­ளுக்­கான பணி­களை செய்ய வேண்­டும், இங்கே முத­ல­மைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய நமது முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் செய்து கொண்­டி­ருப்­பதை போல பணி­கள் செய்ய வேண்­டும். சும்மா இங்கே வந்து மக்­களை பிரிக்­கக்­கூ­டிய பேச்­சுக்­கள், வீரா­வே­ச­மான பேச்­சுக்­கள், மற்­ற­வர்­களை பழி சொல்­லக்­கூ­டிய பேச்­சுக்­களை மட்­டும் வைத்­துக்­கொண்டு தேர்­தலை வெற்றி பெற்று விட முடி­யாது என்ற பாடத்தை தமிழ் மக்­கள் சொல்­லித் தந்­தி­ருக்­கி­றார்­கள்.!


இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் உரி­மைத் தொகை தரு­வேன் என்று அறி­வித்­த­வர் நமது முத­ல­மைச்­சர் அண்­ணன். அறி­வித்­த­படி அதை ஒரு கோடியே 16 லட்­சம் சகோ­த­ரி­க­ளுக்கு மாதா­மா­தம் வழங்­கிக் கொண்­டி­ருப்­ப­வர் முத­ல­மைச்­சர். இந்த கூட்­டத்­தி­லேயே மக­ளிர் உரி­மைத் தொகை வாங்­கு­ப­வர்­கள் அமை­தி­யாக இருப்­பீர்­கள். வாங்­காத அந்த இரண்டு மூன்று பேர் இன்­னும் வர­லையே என்று சொல்­வீர்­கள். ஆனால் மிக விரை­விலே மறு­ப­டி­யும் கணக்­கெ­டுக்­கப்­பட்டு விடு­பட்டு போன­வர்­க­ளுக்­கும் மக­ளிர் உரி­மைத்­தொகை வழங்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் தளபதி அறி­வித்­தி­ருக்­கி­றார்.!


திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றாலே கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்றி தரக் கூடி­ய­வர்­கள் என்று தான் அர்த்­தம். தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இல­வச வண்­ணத் தொலைக்­காட்சி பெட்டி தரு­கி­றேன் என்று அறி­வித்த போது யாருமே நம்­ப­வில்லை. ஒரு அர­சாங்­கத்­தால் இதை­யெல்­லாம் செய்ய முடி­யாது என்று சொன்­னார்­கள். ஆனால் ஆட்­சிக்கு வந்­த­தும் அதை நிறை­வேற்­றிக் காட்­டி­ய­வர் தலை­வர் கலை­ஞர்.!


மக்­க­ள­வைத் தேர்­தல் பிரச்­சா­ரத்­துக்கு சென்ற போது கூட கலை­ஞர் தொலைக்­காட்சி பெட்டி பற்றி பேசிய போது இன்­னும் அது வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றது என்று பலர் சொன்­னார்­கள். அதைக்­கேட்க மகிழ்ச்­சி­யாக இருந்­தது.!


ஆகை­யால் நாங்­கள் கொடுக்­கக் கூடிய வாக்­கு­று­தி­கள் அது விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ர­மாக இருக்­கட்­டும், விவ­சா­யி­க­ளின் கடன் ரத்­தாக இருக்­கட்­டும், அரசு பள்­ளி­யில் படித்த மாண­வர்­கள் கல்­லூ­ரி­யில் சேரும்­போது அவர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப் பெண் திட்­ட­மாக இருக்­கட்­டும், இளம்­பெண்­க­ளுக்கு மட்­டு­மல்ல இளை­ஞர்­க­ளுக்­கும் கல்­லூ­ரி­யில் படிப்­ப­தற்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் உத­வித்­தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார்.!


இவ்­வாறு மக்­கள் முன்­னேற வேண்­டும், தலை­மு­றை­கள் முன்­னேற வேண்­டும், அடுத்த தலை­முறை இந்த உல­கத்தை ஆட்சி நடத்த வேண்­டும் என்று சிந்­திக்க கூடிய ஒரு ஆட்­சியை... தமி­ழர்­கள் இந்த உல­கத்தை வழி­ந­டத்­தக் கூடி­ய­வர்­கள். அவர்­க­ளது திற­மை­களை நாம் அவர்­க­ளு­டைய திற­மை­களை நாம் வளர்த்து விட வேண்­டும் என்று சிந்­திக்­கக்­கூ­டிய ஆட்­சியை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நடத்தி வரு­கி­றோம்.!


இன்று கூட தொலைக்­காட்­சி­யில் பார்த்­தீர்­கள் என்­றால் நான் முதல்­வன் திட்ட பயிற்­சி­யில் இளை­ஞர்­கள், இளம்­பெண்­கள் வெளி­நாடு சென்று திரும்பி வந்­தி­ருக்­கி­றார்­கள். புதுப்­புது விஷ­யங்­களை நிறைய கற்­றுக் கொண்­டோம் என்று அந்த மாண­வர்­கள் மகிழ்ச்­சி­யோடு தெரி­விக்­கி­றார்­கள்.!


இப்­படி மக்­க­ளுக்­காக புதிய புதிய திட்­டங்­களை தொடர்ந்து செய்து கொண்­டி­ருக்க கூடிய ஆட்சி நமது ஆட்சி. அதற்கு மக்­கள் தந்­தி­ருக்­கக்­கூ­டிய பாராட்டு பத்­தி­ரம் தான் இந்த 40க்கு 40 வெற்றி என்­பது.!


இப்­போது நடக்­கக்­கூ­டிய ஒன்­றிய பா.ஜ.க. ஆட்சியை, முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா சொன்­னது போல மைனா­ரிட்டி ஆட்சி, புதிய கல்­விக் கொள்கை திட்­டத்தை கொண்டு வர வேண்­டும் என்று துடித்­துக் கொண்­டி­ருந்­தார்­கள்.!


தலை­வர் கலை­ஞர் சின்ன சின்ன ஊர்­க­ளில் கூட கல்­லூ­ரி­களை திறந்­தார். கல்­லூரி வெளி­யூ­ரில் இருந்­தால் அது ஆணாக இருக்­கட்­டும் பெண்­ணாக இருக்­கட்­டும் நீண்ட தூரம் சென்று கல்வி படிக்க முடி­யாது, ஹாஸ்­ட­லில் தங்கி படிக்க முடி­யாது என்­ப­தால், அவர்­க­ளுக்­கான கல்வி மறுக்­கப்­பட்டு விடக்­கூ­டாது என்­ப­தை மனதில் கொண்டு ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரியை தலை­வர் கலை­ஞர் உரு­வாக்­கி­னார். அதே­போல நம்­மூர் பிள்­ளை­கள் கல்வி பயில வேண்­டும் என்­ப­தற்­காக சின்ன சின்ன ஊர்­க­ளில் அரசு கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­களை உரு­வாக்­கி­னார் முத்தமிழறிஞர் தலை­வர் கலை­ஞர்.


ஆனால் இந்த புதிய கல்­விக் கொள்­கை­யில் என்ன சொல்­கி­றார்­கள் என்­றால்... எல்லா கல்­லூ­ரி­க­ளை­யும் ஓர் இடத்­துக்கு கொண்டு சென்று விட வேண்­டும். அப்­படி என்­றால் கிரா­மப்­புற பிள்­ளை­கள் எப்­படி படிப்­பார்­கள்?


அது மட்­டும் இல்­லா­மல் நாம் இங்கே வெற்­றி­க­ர­மாக ஒரு திட்­டத்தை உரு­வாக்கி நடத்­திக் காட்டி இருக்­கி­றோம். ஆனால் அவர்­கள் இந்­தி­யா­வில் இன்­னும் 30 வரு­டங்­க­ளில் 50 சத­வீ­தம் பேர் உயர்­கல்வி பெற்­ற­வர்­கள் என்ற விகி­தத்தை உரு­வாக்கி காட்­டு­வோம் என்று சொல்கிறார்கள்.!


ஆனால் நான் சொல்­கி­றேன்... இந்த இலக்கை தலை­வர் கலை­ஞர் என்றோ முடித்து விட்­டார். இன்­றைக்கு உயர் கல்­விக்கு செல்­ப­வர்­கள் 58 சத­வீ­தம் என்­பதை தொட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது தமிழ்­நாடு. நீங்கள் முப்­பது வரு­ஷம் கழித்து ஒன்றை செய்து விட வேண்­டும் என்று முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.


ஆனால் அதை ஏற்­க­னவே நடத்­திக் காட்­டி­னார்,முத்தமிழறிஞர் தலைவர் கலை­ஞர் . அத­னால் தமிழ்­நாட்­டைப் பார்த்து கற்­றுக் கொள்­ளுங்­கள். இங்கே நாங்­கள் ஆட்சி நடத்­தக்­கூ­டிய முறையை பார்த்து கற்­றுக் கொள்­ளுங்­கள். அப்­போ­தா­வது தொலைந்து போகா­மல் இருப்­ப­தற்­கான வழியை காண்­பீர்­கள்.


40 இடங்­க­ளி­லும் நாம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம். இங்கே நம்­மு­டைய சகோ­தரி ராணி அவர்­கள் வெற்றி பெற்­றி­ருக்­கி­றார். நமது சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பேசும் போது தான் கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­களை எல்­லாம் எடுத்து சொல்­லிக் கொண்­டி­ருந்­தார். மேலும் என்­னி­டம் வரும் வழி­யில் பேசிக் கொண்­டி­ருந்­த­போது... தென்­காசி மாவட்ட மக்­க­ளுக்கு வேலை வாய்ப்பு அவ்­வ­ள­வாக இல்லை, விவ­சா­யம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சூழல் இருக்­கி­றது, அத­னால் இங்கே வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்கி தரக்­கூ­டிய வழி­மு­றை­களை செய்ய வேண்­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.

ree

நிச்­ச­ய­மாக இங்கே மக்­க­ளவை உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப் பட்­டி­ருக்­கக்­கூ­டிய ராணி ஸ்ரீகு­மார் ,சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராஜா ஆகியோர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக நானும் இங்கே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்கி தரக்­கூ­டிய வகை­யிலே முத­ல­மைச்­சரி­டம் பேசி திட்­டங்­களை வாங்கி தரு­வோம் என்ற உறு­தியை உங்­க­ளுக்கு நான் வழங்­கு­கி­றேன்.!


அதே நேரத்­தில் இந்த நல்­லாட்சி தமி­ழ­கத்தை பாது­காக்க கூடிய அண்­ணன் தள­பதியின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்­நாட்­டில் என்­றென்­றும் நிலைத்­தி­ருக்க வேண்­டும். அது­தான் இங்கே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்கு பாது­காப்பு. அடுத்த தலை­முறை இளை­ஞர்­கள் இளம் பெண் ­க­ளுக்கு பாது­காப்பு. அத­னால் வரக்­கூ­டிய சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி, அண்­ணன் தள­பதியார் தலை­மை­யி­லான ஆட்சி, முத­ல­மைச்­சர் சொன்­னது போல் 200ஐ தாண்­டக்­கூ­டிய வெற்றி என்­பதை நாம் உரு­வாக்கி காட்ட வேண்­டும்.!

ree

அது ஒன்­றும் கஷ்­டம் அல்ல. இப்­போது 40க்கு 40 பெற்­றது போல தமிழ்­நாட்­டில் வேறு யாருக்­கும் இட­மில்லை என்­பதை நம்­மால் நிரூ­பிக்க முடி­யும். அதற்­கான உழைப்பை, அதற்­கான வேலை­களை நாம் இன்றே தொடங்க வேண்­டும், இன்­றி­லி­ருந்து மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­தல் பணி­களை ஆற்­றத் தொடங்க வேண்­டும்” என்று கூறினார்.!


இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­னார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page