பாஜக - அதிமுக ஜனநாயக விரோத போக்கு! தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- உறியடி செய்திகள்

- Mar 12, 2024
- 1 min read

பன்முகத்தன்மை, பல்வேறு காலாச்சாரங்கள், மொழி, சார்ந்து, ஒற்றுமையுடன் இந்திய ஒன்றியத்தின் ஒரே குடையின் கீழ், தேச பற்றுடன், அனைத்துத்தரப்பு மக்களும், தொப்புள்கொடி உறவுகளாய், சகோதர ஒற்றுமையுடன், வாழும் இந்திய ஒன்றியத்தில், இது நாள் வரை சனாதான போக்கு, மத, , பிரிவினை தூண்டும் வகையில் பிளவை ஏற்படுத்தி, மக்களை பிரித்தா ளும் சூழ்ச்சிகள் மூலம்,, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி.!
தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி உள்நோக்கத்தோடுஅரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.!

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகுந்த, மதம் சாயம் பூசும் சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க. வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!
இந்த நாடாளுமன்ற தேர்தலில்,தக்க பாடம் புகட்டுவார்கள்!’’ என்று, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.!
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது.!

‘குடியுரிமை’ என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனை தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம்தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.!
மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.
தி. மு. கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.!

இப்போது, தேர்தலில் தனது அனைத்துஅஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.!
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க. வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!
இவ்வாறாக சமூக வலைதளப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.




Comments