top of page
Search

சி. ஏ.ஏ. சட்ட எதிர்ப்பில் உறுதி! உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றத்தையும் நாடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 18, 2024
  • 6 min read
ree


­ “தேர்­தல் பத்­திர ஊழல் பா.ஜ.க.வின் முகத்­திரையை கிழித்­துள்­ளது” என்­றும் “குஜ­ராத்தை மறைத்து போதைப் பொருள் நட­மாட்­டம் குறித்து அ.தி.மு.க. – பா.ஜ.க. அர­சி­யல் நாட­கம் நடத்­து­கி­றார்­கள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.!

ஆங்­கிலநாளேட்­டு ஒன்றில் வெளி­யா­கி­யுள்ள தி.மு.கழ­கத் தலை­வர் –முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் கூறியிருப்பதாவது.!



ஒரு தாய்க்கு தனது எல்­லாக் குழந்­தை­க­ளும் சிறந்த குழந்­தை­கள்­தான். அது போல், எனது அனைத்­துத் திட்­டங்­க­ளும் சிறப்­பான திட்­டங்­கள்­தான். முக்­கி­ய­மான திட்­டங்­கள்­ தான். முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­தும் முதல் கையெ­ழுத்­துப் போட்­டது விடி­யல் பய­ணம் திட்­டத்­துக்­காக. நக­ரப் பேருந்­து­க­ளில் மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து வச­தியை ஏற்­ப­டுத்­தித் தந்­தது கோடிக்­க­ணக்­கான பெண்­க­ளுக்கு தினந்­தோ­றும் பய­ன­ளித்து வரு­கி­றது. மாதம் தோறும் 800 ரூபாய் வரை அவர்­கள் சேமிக்­கி­றார்­கள்.!


இதை­விட முக்­கி­ய­மாக, பெண்­க­ளின் சமூ­கப் பங்­க­ளிப்பு அதி­க­மாகி உள்­ளது. அதே­போல் மாதம் தோறும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தின் மூல­மாக 1.15 கோடி பெண்­கள் பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுள்­ளார்­கள். நாங்­கள் இதனைஅறி­வித்த போது, நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­றுதி என்று எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்­தார்­கள். மிகக்­க­டு­மை­யான நிதி நெருக்­கடி இருந்­தா­லும் மக­ளி­ருக்கு உரி­மைத் தொகையை வழங்­கி­யாக வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தேன்.!

ree

நான் முதல்­வன் திட்­டம்

எனது கன­வுத் திட்­டம்!

என்­னு­டைய கன­வுத் திட்­டம்­தான், ‘நான் முதல்­வன்’ திட்­டம். படித்த இளை­ஞர்­கள் அனை­வர்க்­கும் தனித்­தி­ற­மையை ஏற்­ப­டுத்தி, அனைத்­துப் பணி­க­ளுக்­கும் அவர்­­களைத் தகு­தி­யா­ன­வர்­க­ளாக ஆக்கி வரு­கி­றோம். அர­சுப் பள்­ளி­யில் படித்து விட்டு உயர்­கல்­வியை நோக்கி வரும் மாண­வி­யர்க்கு ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் திட்­டம் மாண­வி­யர் மத்­தி­யில் மறு ­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. மாண­வி­யர்க்கு மட்­டும் தானா, மாண­வர்க்கு இல்­லையா என்ற கோரிக்­கையை ஏற்று, ‘தமிழ்ப்­பு­தல்­வன்’ என்ற பெய­ரில் மாண­வர்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.!


மதிய உண­வுத் திட்­டத்தை இன்­னும் விரி­வு­ப­டுத்­தும் வகை­யில் முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டத்தை தொடங்கி வைத்­துள்­ளோம். 17 லட்­சம் பிள்­ளை­கள் தின­மும் காலை­யில் வயி­றார உணவு உண்ட பிறகு கல்வி கற்­கி­றார்­கள். இத­னைப் பார்க்­கும்­போது என் மனம் நிறை­கி­றது.!


தமிழ்­நாட்­டின் நிதி­நி­லையை அத­ல­பா­தா­ளத்­தில் விட்­டுச் சென்­றது முந்­தைய அ.தி.மு.க. அரசு. தி.மு.கழகம். ஆட்­சிக்கு வந்த மூன்­றாண்டு காலத்­தில் அதனை இயன்ற அள­வில் சரிப்­ப­டுத்தி, மேம்­ப­டுத்தி வரு­கி­றோம். எனி­னும், தமிழ்­நாட்­டிற்­கு­ரிய வரிப்­பங்­கீடு, திட்­டங்­களுக்­கான ஒதுக்­கீடு உள்­ளிட்­ட­வற்­றில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன் பார­பட்­ச­மாக நடந்து கொள்­கி­றது. அத­னால், தொடர்ந்து கடும் நிதி நெருக்­க­டியை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அப்­ப­டிப்­பட்ட சூழ­லி­லும் மக்­கள் நலன் காக்­கும் காலை உண­வுத் திட்­டம் போன்ற திட்­டங்­க­ளை­யும், ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கான கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் உரு­வாக்­கிச் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.!

2024 மே மாதத்­திற்­குப் பிறகு, நிதி­நி­லைமை சீரா­கும் சூழல் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. மக்­க­ளுக்­கான புதிய திட்­டங்­கள் தொட­ரும். இன்­னும் பல திட்­டங்­கள் வர இருக்­கின்­றன.

எந்­தத் திட்­டத்­திற்­கும் உரிய நிதியை

ஒன்­றிய அரசு தரு­வ­தில்லை!

ree

ஒன்­றியத்­­தில் பா.ஜ.க. ஆட்சி செய்­யும் கடந்த பத்­தாண்­டு­க­ளில் தமிழ்­நாடு உள்­பட பல மாநி­லங்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளும், நிதி ஆதா­ரங்­க­ளும் பறிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. முந்­தைய அ.தி.மு.க. ஆட்­சி­யா­ளர்­கள் தங்­கள் பத­வி­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­வ­ தற்­காக உதய் மின் திட்­டம், நீட் தேர்வு நுழைவு என ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் மேலா­திக்­கப் போக்­கிற்கு அடி­ப­ணிந்து விட்­டார்­கள். இதன் கார­ண­மாக மாநி­லத்­தின் நிதி நிலை­மை­யும் கடும் பாதிப்­புக்­குள்­ளா­னது. ஆட்சி மாற்­றத்­திற்­குப் பிறகு அத­னைச் சீர்ப்­ப­டுத்தி வரு­கி­றோம்.!


மெட்ரோ ரயில் திட்­டம், வெள்­ளப் பேரி­டர் உள்­ளிட்ட எதற்­கும் ஒன்­றிய அரசு உரிய நிதி ஒதுக்­கு­வ­தில்லை. எனி­னும், தமிழ்­நாட்டு மக்­க­ளைப் பாது­காக்­க­வும் அவர்­க­ளுக்கு உரிய கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கித் தர­வும் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து, அதற்­கான நிதி­ஆ­தா­ரங்­க­ளைத் திரட்டி, திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வது தொட­ரும்.!

ree

பொது­வாக, மாற்­றுக் கட்­சி­யில் இருப்­ப­வர்­கள் நம்மை விமர்­ச­னம் செய்­யும்­போது ஒரு சில பொய்­களை, தவ­றான தக­வல்­களை வெளி­யி­டு­வது உண்டு. ஆனால், பிர­த­மர் போன்ற மிக உயர்ந்த பொறுப்­பில் இருப்­ப­வர்­கள் அப்­ப­டிச் செயல்­ப­ட­மாட்­டார்­கள். பண்­டி­தர் நேரு முதல் டாக்­டர் மன்­மோ­கன் சிங் வரை பிர­த­மர்­கள் அப்­ப­டித்­தான் இருந்­தார்­கள். ஆனால், திரு. நரேந்­திர மோடி­யும் அவ­ரது பா.ஜ.க. நிர்­வா­கி­க­ளும் தவ­றான தக­வல்­க­ளைச் சொல்­ப­வர்­க­ளா­க­வும், வதந்­தி­களை வாட்ஸ்­ஆப் வழி­யா­கப் பரப்­பு­கி­ற­வர்­க­ளா­க­வும் இருக்­கி­றார்­கள். இதையே முழு நேரத் தொழி­லா­கக் கொண்­டி­ருக்­கிற பா.ஜ.க. நிர்­வா­கி­க­ளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்­பி­னால் பதில் இருக்­காது. இன்­னொரு வதந்­திக்கோ, விமர்­ச­னத்­திற்கோ தாவி விடு­வார்­கள்.

தி.மு.க. மீது திசை திருப்­பும்

விமர்­ச­னம் செய்­கி­றார் மோடி!


ஒன்­றிய அர­சின் எந்­தத் திட்­டத்­தைத் தமிழ்­நாடு அரசு முடக்­கி­யது என்று கேட்­டால் அதற்­குப் பதில் வராது. கார­ணம், ஒன்­றிய அர­சின் பங்­க­ளிப்­போடு நடை­பெ­றும் பிர­த­ம­ரின் வீடு கட்­டும் திட்­டம், ஜல்­ஜீ­வன் திட்­டம் உள்­ளிட்ட அனைத்­தி­லும் தமிழ்­நாடு அரசு தன் பங்­க­ளிப்­பைக் கூடு­த­லா­கச் செலுத்தி, சிறப்­பாக நிறை­வேற்றி அதற்­காக ஒன்­றிய அர­சின் சார்­பி­லேயே விரு­து­க­ளை­யும் பெற்­றுள்­ளது. இது பிர­த­மர் தொடங்கி பா.ஜ.க. நிர்­வா­கி­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும். அத­னால்­தான் தி.மு.க. மீது வாரிசு அர­சி­யல், ஊழல் முறை­கேடு என்று திசை­தி­ருப்­பும் விமர்­ச­னங்­களை வைப்­பது வழக்­க­மா­கி­விட்­டது.!

ree

நான் கலை­ஞ­ரின் மகன்­தான். அவ­ரு­டைய கொள்கை வாரி­சு­தான். அந்த அடிப்­ப­டை­யில்­தான் மக்­கள் என் மீது நம்­பிக்கை வைத்து முத­ல­மைச்­ச­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்­கள். பா.ஜ.க. வெளி­யிட்­டுள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள வாரி­சு­க­ளுக்கு பிர­த­ம­ரும் அவ­ரது கட்சி நிர்­வா­கி­க­ளும் என்ன பதில் சொல்­லப்­போ­கி­றார்­கள்?


ஜெய­ல­லிதா அம்­மை­யா­ரின் ஆட்­சியை ஊழல் ஆட்சி என்று இதே மோடி­யும் அமித்­ஷா­வும் விமர்­சித்­தி­ருக்­கி­றார்­கள். இப்­போது எம்.ஜி.ஆரை­யும் ஜெய­ல­லி­தா­வை­யும் போற்­று­கி­றார்­கள். தமிழ்­நாட்­டில் தங்­க­ளு­டைய சாதனை என்று பா.ஜ.க.வால் எதை­யும் சொல்ல முடி­யாது. தி.மு.க ஆட்­சி­யின் சாத­னை­கள் மீதோ, பேர­றி­ஞர் அண்ணா - -– முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் அர­சி­யல் கொள்­கை­கள் மீதோ பா.ஜ.க.வால் ஸ்டிக்­கர் ஒட்ட முடி­யாது. அத­னால் எம்.ஜி.ஆரை­யும் ஜெய­ல­லி­தா­வை­யும் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.!


அ.தி.மு.க. – பா.ஜ.க.வும்­தான்

போதைப் பொரு­ளுக்கு

வித்­திட்ட கட்­சி­கள்!

பா.ஜ.க. ஆட்சி செய்­யும் குஜ­ராத்­தான் போதை மருந்­து­க­ளின் தலை­ந­க­ர­மாக உள்­ளது என்­ப­தைப் பல புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன. அண்­மை­யில், பழ­னி­சா­மி­யும் அதே குற்­றச்­சாட்டை சொல்­லி­யி­ருக்­கி­றார். ஆக, இந்த இரண்டு கட்­சி­க­ளும்­தான் போதைப் பொருள்­க­ளுக்கு வித்­திட்ட கட்­சி­கள். ஜாபர் சாதிக் விவ­கா­ரத்­தில் சட்­டப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. தி.மு.க. மீது­அ­வ­தூறு பரப்­பி­னால் சட்ட நட­வ­டிக்­கை­களை எதிர்­கொள்ள நேரி­டும்.!

ree

இந்­தியா முழு­வ­தும் மோடி தலை­மை­யி­லான அர­சின் பத்­தாண்­டு­கால ஆட்­சி­யின் அவ­லங்­க­ளும் அத­னால் அதி­ருப்­தி­க­ளும் வெளிப்­பட்டு வரு­கின்­றன. அது தேர்­தல் களத்­தில் நிச்­ச­யம் எதி­ரொ­லிக்­கும். தமிழ்­நா­டும் தென்­மா­நி­லங்­க­ளும் அதைக் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லேயே எதி­ரொ­லித்­தன. தமிழ்­நாட்­டிற்கு என்­னென்ன நன்­மை­கள் செய்­தார் என்று மக்­க­ளி­டம் உண்­மை­யைச் சொல்ல முடி­யுமா? அவர் வரு­கிற ஒவ்­வொரு முறை­யும் அவரே தனது ஆட்­சி­யின் அவ­லங்­களை நினை­வு­ப­டுத்­தி­விட்­டுச் செல்­வார்.!


தமிழ்­நாட்­டில் தாமரை மல­ருமா?

கவி­ழுமா? என்­பது தேர்­தல் முடிவு காட்­டும்!

: –மாய பிம்­பத்­தைக் கட்­ட­மைக்க நினைக்­கி­றார்­கள். (தாமரை) மல­ருமா கவி­ழுமா என்ற உண்­மை­யைத் தேர்­தல் முடி­வு­கள் காட்­டி­வி­டும்.

: –2004–-ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போ­தும் இதே­போல ‘இந்­தியா ஒளிர்­கி­றது’ என்று ஆளும் பா.ஜ.க. தன் பிரச்­சா­ரத்தை முன்­னெ­டுத்­தது. கருத்­துக் கணிப்­பு­க­ளும் அத­னை­யொட்­டியே இருந்­தன. குறிப்­பாக, வட மாநி­லங்­க­ளில் பா.ஜ.க. ஆத­ரவு அலை என்று தெரி­வித்­தன. எதிர்க்­கட்­சி­க­ளி­டம் ஒற்­று­மை­யில்லை என விமர்­சிக்­கப்­பட்­டது. ஆனால், தேர்­தல் முடி­வு­கள் ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கே சாத­க­மாக அமைந்­தன. அடுத்த பத்­தாண்­டு­கள் ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி ஆட்­சி­தான் நடை­பெற்­றது. 2004 போலத்­தான் 2024 தேர்­தல் முடி­வு­க­ளும் அமை­யும். வர­லாறு திரும்­பும்.!

ree

‘இந்­தியா’ கூட்­ட­ணியை தகர்த்­து­வி­ட­லாம்

என்ற பா.ஜ.க.வின் எண்­ணம் நிறை­வே­றாது!

‘இந்­தியா’ கூட்­ட­ணியை முற்­றி­லு­மா­கத் தகர்த்­து­வி­ட­லாம் என்ற பா.ஜ.க.வின் எண்­ணம் நிறை­வே­ற­வில்லை என்­ப­தைத்­தான் வெளிப்­ப­டுத்­து­கி­றது. மத­வாத அர­சி­யல் என்­பது பா.ஜ.க.வின் அடிப்­ப­டைக் கொள்கை. மக்­க­ளின் பக்­தி­யு­ணர்வை வாக்­கு­க­ளாக மாற்ற நினைப்­பது அதன் தேர்­தல் உத்­தி­யாக இருக்­க­லாம்.

மதச்­சார்­பின்மை – பன்­மு­கத்­தன்மை - – மாநில உரி­மை­களை எந்­த­ளவு பா.ஜ.க. சிதைத்­துள்­ளது என்­ப­தும் மக்­க­ளுக்­குத் தெரி­யும். அதை உரிய வகை­யில் தேர்­தல் களத்­தில் எடுத்­து­ரைக்­கும் பணியை இந்­தியா கூட்­டணி உறு­தி­யா­க­வும் தெளி­வா­க­வும் மேற்­கொள்­ளும்.!


ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் எந்­தெந்­தக் கட்­சி­க­ளுக்கு செல்­வாக்கு இருக்­கி­றதோ அதற்­கேற்­பத் தொகு­திப் பங்­கீடு இருக்க வேண்­டும் என்­ப­தும், அந்­தந்த மாநி­லங்­க­ளி­லும் பெறு­கின்ற முழு­மை­யான வெற்­றி­யின் மூலம் ஒன்­றிய அர­சில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­பதை இந்­தியா கூட்­ட­ணி­யின் முதல் கூட்­டத்­தி­லேயே வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன். ஒரு சில கட்­சி­கள் தங்­க­ளின் மாநில அர­சி­யல் சார்ந்த கண்­ணோட்­டத்­தில் செயல்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யாது. பா.ஜ.க. மீது மக்­க­ளுக்­குள்ள கோபத்தை வாக்­கு­க­ளாக மாற்­றும் சக்தி பெற்ற அர­சி­யல் கட்­சி­களே தற்­போ­தைய தேர்­தல் களத்­தில் முதன்­மை­யாக இருப்­ப­தைப் பல மாநி­லங்­க­ளி­லும் காண முடி­கி­றது.!

ree

சட்­ட­மன்ற - – நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்

மக்­க­ளின் தீர்ப்பு அவ்­வப்­போது மாறும்!

ஒரு சில மாதங்­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கும் இடை­யில் மக்­க­ளின் தீர்ப்­பு­கள் மாறு­பட்­டி­ருப்­ப­தைப் பல தேர்­தல்­க­ளில் பார்த்­தி­ருக்­கி­றோம். இனி­யும் பார்க்­க­லாம்.

ராகுல் காந்தி இந்­தி­யா­வின் நம்­பிக்­கைக்­கு­ரிய தலை­வ­ராக உள்­ளார். அர­சி­யல் மட்­டு­மல்ல சமூ­கக் கருத்­து­க­ளை­யும் துணிச்­ச­லாக அவர் வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார். களத்­தில் அவ­ரு­டைய பங்­க­ளிப்பு நிறைய தேவைப்­ப­டும்.!


‘இந்­தியா’ கூட்­டணி தனது

பணி­யைத் தொடங்கி விட்­டது

: –இந்­தியா கூட்­டணி என்­பது தன்­னு­டைய வேலைத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தத் தொடங்­கி­விட்­டது. அவற்றை ஒருங்­கி­ணைக்­கும் பணி­க­ளும் நடை­பெற்று வரு­கின்­றன. தேர்­தல் பரப்­பு­ரை­க­ளின் போது உங்­க­ளின் கேள்­விக்­கான விடையை நேரில் காண்­பீர்­கள்.

–பா.ஜ.க. ஆட்­சி­யில் இல்­லாத மாநி­லங்­கள் மற்­றும் பா.ஜ.க.வை எதிர்க்­கும் கட்­சி­கள் இவற்­றைக் குறி­வைத்தே அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ, வரு­மா­ன­வ­ரித்­துறை ரெய்­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பதை எல்­லா­ரும் அறி­வார்­கள். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள் பா.ஜ.க.வுக்­குத் தாவி விட்­டால், அவர்­கள் மீதான ஊழல் கறை­யைச் சலவை செய்து தூய்­மைப்­ப­டுத்­தும் வாஷிங் மெஷி­னாக பா.ஜ.க. செயல்­பட்டு, அவர்­க­ளுக்­குக் கட்­சி­யி­லும் ஆட்­சி­யி­லும் பத­வி­யும் வழங்கி வரு­கி­றது.

அர­சி­யல் கட்­சி­களை மிரட்ட

அம­லாக்­கத்­து­றை­யைப் பயன்­ப­டுத்­தும் மோடி!


மற்ற கட்­சி­க­ளை­யெல்­லாம் ஊழல்­வா­தி­கள் என்­றும், தாங்­கள் மட்­டுமே யோக்­கி­ய­சி­கா­ம­ணி­கள் என்­றும் சொல்லி வந்த பா.ஜ.க.வின் முகத்­திரை தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் அம்­ப­ல­மா­கி­யி­ருக்­கி­றது. அம­லாக்­கத் துறை­யால் நட­வ­டிக்­கைக்­குள்­ளான நிறு­வ­னங்­கள் பல அடுத்த சில நாட்­க­ளில் பா.ஜ.க.வுக்­கு­ பெ­ரு­ம­ள­வில் நிதி­ய­ளித்­தி­ருப்­பது வெளிப்­பட்­டுள்­ளது. இதி­லி­ருந்தே அர­சி­யல் கட்­சி­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் மிரட்­டு­வ­ தற்­கா­கவே அம­லாக்­கத்­துறை என்­கிற அமைப்பை மோடி அரசு பயன்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தும், அதன் மூல­மாக நூற்­றுக்க­ணக்­கான கோடி­களை நிதி­யா­கப் பெற்­றி­ருப்­ப­தும் உறு­தி­யா­கி­விட்­டது. உண்­மை­யான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்­பதை மக்­கள் நன்­றா­கவே புரிந்­து­ கொண்­டார்­கள்.!

ree

தோழ­மைக் கட்­சி­க­ளுக்கு

மதிப்­ப­ளித்து தொகு­திப் பங்­கீடு!

இது தேர்­தல் கூட்­டணி அல்ல. கொள்­கைக் கூட்­டணி என்­பதை 2019, 2021 தேர்­தல்­க­ளில் நிரூ­பித்­தோம். அதே கூட்­டணி இப்­போ­தும்தொடர்­கி­றது. தோழ­மைக் கட்­சி­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து தொகுதிப்­பங்­கீ­டும் எந்­தச் சின்­னத்­தில் போட்­டி­யி­டுவது என்­ப­தும் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் ஆரோக்­கி­ய­மான கூட்­ட­ணி­யின் தொடர் செயல்­பாடு. புதுச்­சேரி உள்­ளிட்ட 40 தொகு­தி­க­ளி­லும் முழு­மை­யான வெற்றி என்­ப­து­தான் எங்­கள் இலக்கு.

யூகங்­க­ளா­கப் பல செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருக்­க­லாம். ஒரு சில தேர்­தல் தோல்­வி­கள் அடிப்­­படை­யில் எல்லா அம்­சங்­க­ளை­யும் புறக்­க­ணித்­து­விட முடி­யாது. பா.ஜ.க.வுக்கு எதி­ராக நிற்­கக்­கூ­டிய தேசிய அள­வி­லான கட்சி காங்­கி­ரஸ். அதற்­கு­ரிய இடத்தை வழங்­கி­யி­ருக்­கி­றோம்.!


கள நில­வ­ரத்தை தி.மு.க.

உணர்ந்தே தொகு­திப் பங்­கீடு!

தி.மு.க.வைத் தோழ­மைக் கட்­சி­யி­னர் நம்­பு­கி­றார்­கள். தோழ­மைக் கட்­சி­களை தி.மு.க. மதிக்­கி­றது. கள நில­வ­ரத்­தை­யும் தி.மு.க. உணர்ந்­தி­ருக்­கி­றது. இதன் வெளிப்­பா­டு­தான் தற்­போ­தைய தொகு­திப் பங்­கீடு.

:சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இரண்டு பொதுத் தொகு­தி ­க­ளில் விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யி­னர் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று, உறுப்­பி­னர்­களாக உள்­ள­னர். தற்­போ­தைய தேர்­தல் களத்­தை­யும் சூழ­லை­யும் பற்றி முழு­மை­யா­கக் கலந்­தா­லோ­சித்­துத்­தான் முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. அது குறித்து, சகோ­த­ரர் திரு­மா­வ­ள­வன் அவர்­களே தெளி­வாக விளக்­கி­விட்­டார்.

இளை­ய­வர்­கள் – மூத்­த­வர்­கள் – பெண்­கள்என அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வேட்­பா­ளர் பட்­டி­யல் வரும்.

:மூத்­த­வர்­கள் – இளை­ய­வர்­கள் --– பெண்­கள் ஆகிய அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கியே வேட்­பா­ளர் பட்­டி­யல் இருக்­கும்.!


:தன்­னிச்­சை­யா­கச் செயல்­ப­டக்­கூ­டிய எந்­த­வொரு அமைப்­பை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு தன் கைப்­பா­வை­யாக மாற்­று­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருப்­ப­தைக் கடந்த 10 ஆண்­டு­க­ளில் பார்த்­து­விட்­டோம். தேர்­தல் ஆணை­யத்­தின் மீதான பா.ஜ.க அர­சின் ஆதிக்­க­மும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. ஜன­நா­ய­கத்­தைக் காக்­கின்ற போராட்­டத்­தில் இத­னை­யும் கவ­னத்­தில் கொண்டே செயல்­ப­டு­கி­றோம்.!

ree

பா.ஜ.க. அரசு உச்­ச­நீ­தி­ மன்­றத்­தையேஏமாற்ற நினைத்­தது அம்­ப­ல­மா­கி­விட்­டது!

:இந்­திய மக்­க­ளின் கடைசி நம்­பிக்­கை­யாக உச்­ச­நீ­தி­மன்­றம் உள்­ளது. அதன் உத்­த­ர­வு­க­ளையே புறக்­க­ணிக்க நினைப்­ப­தும், காலம் தாழ்த்த நினைப்­ப­தும் அர­ச­மைப்­புக்கு எதி­ரான செயல். ஸ்விஸ் வங்­கி­யில் பதுக்­கப்­பட்­டுள்ள இந்­தி­யா­வின் கறுப்­புப்­ப­ணத்தை மீட்டு, ஒவ்­வொரு இந்­தி­ய­ரின் வங்­கிக் கணக்­கி­லும் 15 லட்ச ரூபாய் போடு­வேன் என்று சொன்ன மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு, அதில் ஒரு நயா பைசா­வைக்­கூட மீட்­கா­மல், ஆட்­சி­ய­தி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி, பல்­லா­யி­ரம் கோடி­க­ளைப் பல நிறு­வ­னங்­க ­ளி­ட­மி­ருந்து நிதி­யா­கப் பெற்று, நீதி­மன்­றத் ­தையே ஏமாற்ற நினைத்­தது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.!


:தி.மு.க தனது முதல் தேர்­தல் களத்­தி­லி­ருந்தே தேர்­தல் நிதி திரட்­டு­கிற இயக்­கம்­தான். 1967 தேர்­த­லில் 10 லட்­சம் என்­கிற தேர்­தல் நிதி இலக்கு நிர்­ண­யித்­தார் பேர­றி­ஞர் அண்ணா. 11 லட்­ச­மா­கத் நிதி திரட்­டித் தந்­தார் கலை­ஞர். நாங்­கள் நிதி திரட்­டு­வது என்­ப­தும் அது குறித்த கணக்­கு­களை முறை­யா­கத் தணிக்கை செய்­வ­தும் வழக்­கம்­தான். இப்­போ­தும் அதே வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன்­தான் தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் நிதி திரட்­டி­யி­ருக்­கி­றோம். ஆனால், தி.மு.க உள்­ளிட்ட கட்­சி­க­ளின் செயல்­பா­டு­க­ளைக் குறை­யாக - குற்­ற­மா­கச் சொல்­லிக்­கொண்­டி­ருந்த பா.ஜ.க.வின் யோக்­கி­யத்­தன்மை என்ன என்­ப­தும், அது யார்- – யாரி­டம் எதற்­காக- – எத்­த­கைய நெருக்­கடி கொடுத்து தேர்­தல் நிதி­யைப் பெற்­றுள்­ளது என்­ப­தும் கவ­னத்­திற்­கு­ரி­யது. கையும் கள­வு­மாக சிக்­கி­யுள்­ளது பா.ஜ.க.

பா.ஜ.க. மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால்

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தையே தூக்கி எறிந்துவிடு­வார்­கள்!


:மீண்­டும் பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்­தால் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தையே தூக்கி எறிந்து விடு­வார்­கள். இதைத்­தான் வெளிப்­ப­டை­யாக அவர் சொல்லி இருக்­கி­றார். பா.ஜ.க தோற்­க­டிக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்கு இதை­விட வேறு கார­ணம் தேவை­யில்லை.

பா.ஜ.க.வின் பொய்­மு­கம்

தேர்­தல் களத்­தில் எதி­ரொ­லிக்­கும்!

:பா.ஜ.க.வின் பொய் வாக்­கு­று­தி­கள், துரோ­கங்­கள், மக்­க­ளைப் பிள­வு­ப­டுத்­தும் சதி­கள், மாநில உரி­மை­க­ளுக்­கான ஆபத்து இவற்­றுக்­குள் நீங்­கள் சொன்ன அனைத்­தும் அடங்­கும். அவையேதேர்­தல் களத்­தில் நாடெங்­கும் எதி­ரொ­லிக்­கும்.

:மத­ரீ­தி­யாக – மொழி­ரீ­தி­யாக –- சாதி­ரீ­தி­யாக மக்­க­ளைப் பிள­வு­ப­டுத்­தும் அர­சி­ய­லைத்­தான் பா.ஜ.க. தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது. அதன் ஓர் அங்­கம்­தான் சி.ஏ.ஏ. தற்­போது சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாக மட்­டுமே இது தெரிந்­தா­லும், எதிர்­கா­லத்­தில் ஒவ்­வொரு மாநி­லத்­தில் வாழும் வெவ்­வேறு மொழி பேசும் மக்­களை நோக்­கி­யும் புதிய சட்­டங்­களை பா.ஜ.க. கொண்டு வரும். அதற்கு சி.ஏ.ஏ. ஒரு முன்­னோட்­டம்.

சி.ஏ.ஏ.வை தமிழ்­நாட்­டில்

நடை­மு­றைப்­ப­டுத்த மாட்­டோம் என்­பது உறுதி!


:ஒன்­றிய அரசு கொண்டுவரும் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அதி­கா­ரம் மாநில அர­சு­க­ளி­டம்­தான் உள்­ளது. இந்தி மொழி தொடர்­பான ஒன்­றிய அர­சின் சட்­டத்­திற்கு எதி­ரா­ கத்­தான் பேர­றி­ஞர் அண்ணா இரு­மொ­ழிக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்.இட­ஒ­துக்­கீட்­டில் பொரு­ளா­தார அளவு­கோல் என்­கிற ஒன்­றிய அர­சின் நடை­ மு­றையை மாநில அரசு ஏற்­க­வில்லை. அது­போ­லத்­தான் சி.ஏ.ஏ.விலும் எங்­கள் நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருக்­கி­றோம். இதற்­கு­ரிய அர­சி­யல்­சட்ட உரி­மைக்­கான வழி­யை­ யும் நீதி­மன்­றத்­தின் மூலம் நிலை­ நாட்­டு­வோம்.!


இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆங்­கில இத­ழுக்கு அளித்த சிறப்­புப்பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page