top of page
Search

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 28, 2024
  • 2 min read
ree

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்துவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (28-07-2024), கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரி நீர் வரத்து உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து விடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

ree

தமிழகத்து வழங்க வேண்டிய காவிரி நீரைப் பெற்று நமது விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகள், நடவடிக்கைகளையும், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை காரணமாக உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.!


இந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதியிலுள்ள 13 மாவட்டங்களில், 5,339 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீரை கடைமடைக்குக் கொண்டு செல்லும் வகையில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.!

ree

11 மாவட்டங்களிலுள்ள 925 முறைசார்ந்த ஏரிகளில் 8.513 டி.எம்.சி நீரினை நிரப்பும் வகையில் ஏரிகளும் தயார் நிலையில் உள்ளன.!

மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்சாகுபடிக்கு விவசாயிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.!

ree

இந்த நிலையில், மேட்டூர் அணையில் கடந்த ஜூலை 17ம் தேதி முதல் நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.30 டி.எம்.சி யாகவும் உள்ளது. கர்நாடாகவிலுள்ள 4 முக்கிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வினாடிக்கு சுமார் 1.48 இலட்சம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.!.

ree

கர்நாடாகவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால், இந்த நீர்வரத்து மேலும் மூன்று நாட்களுக்குத் தொடரும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்க படுவதாகவும் கூறப்படுகின்றது.!


இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன சாகுபடிக்கு நீரைத் திறந்து விடுவது குறித்து இன்று காலை தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.!


ஆலோசனை கூட்ட முடிவின்படி, மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரினை செம்மையாகப் பயன்படுத்தும் வகையில் இன்று (28-07-2024) மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை திறப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.!

ree

முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடவும்,

. தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீரை சேமிப்பதற்கும் ஏற்றவாறு மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்துவிடப்படுவதாகவும்,


இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார்.!

ree

குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகளை முன்னதாக மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், திறந்து விடப்படும் நீரைச் சேமித்து வைப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து நீர்வளத் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் கவனமாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுமெனவும், அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.!

ree
ree

இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், வழிகாட்டுதலுடன் தி.மு.கழக முதன்மை செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல், மற்றும் சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர் கே.என். நேரு அணையை திறந்து வைத்தார்.!

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் . ராஜேந்திரன், சதாசிவம், சேலம் கலெக்டர் பிருந்தா தேவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.!

ree

முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிகிறது.!

ree

மேலும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து, காவிரி ஆற்றங்கரையோரங்களில் நின்று செல்பி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.!


இந்நிலையில் மாலை நேர நிலவரப்படி, ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1,58,000 கன அடியாக அதிகரித்துள்ளது.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page