top of page
Search

முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்! தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி - முசிறி அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 16, 2024
  • 2 min read

Updated: Jul 16, 2024

ree

தமிழ் நாடுமுதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.! தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திருச்சி, முசிறியில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.!


முதல்­வர் மு.க.ஸ்டாலின் தமிழ்­நாட்­டில் உள்ள அரசு தொடக்­கப் பள்­ளி­கள் அனைத்­தி­லும், ஒன்­றாம் வகுப்பு முதல் ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் முதல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம் நேற்று ஜூலை 15. ந் தேதி தொடங்­கி­வைக்­கப்­பட்டது,!

இத்திட்டத்தின் 1,545 பள்­ளி­க­ளைச் சேர்ந்த 1 இலட்­சத்து 14 ஆயி­ரம் குழந்­தை­கள் பயன்­பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இத்­திட்­டத்­திற்கு அனைத்து தரப்பு மக்­க­ளி­டையே ஏற்­பட்ட ஏகோபித்த பாரட்டுக்கள் வர­வேற்­பினையும், மாணவ மாண­வி­யர் இடையே ஏற்­பட்ட எழுச்சி­யினை­யும் கருத்­தில் கொண்டு25.8.2023 அன்றே முத்­தமி­ழறி­ஞர் கலை­ஞரின் பிறந்த திருக்­கு­வளையில் தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி­ வைத்தார்.!

அப்போது 30 ஆயி­ரத்து 992 அர­சுத் தொடக்­கப் பள்­ளி­க­ளில் பயி­லும் 18 இலட்­சத்து 50 ஆயி­ரம் குழந்தை­கள் காலை உண­வைச் சூடா­க­வும் சுவை­யா­க­வும் உண்டு மகிழ்ச்­சி­யோடும் பள்­ளிப் பாடங்­க­ளில் கவ­னம் செலுத்­தியும் படித்து வரு­கி­றார்­கள்.!


இந்­நி­லை­யில், இந்த ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கை­யில் இத்­திட்­டம் அரசு உதவி பெறும் தொடக்­கப் பள்­ளிக­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­­படும் என அறி­விக்­கப்­பட்­டது.!

ree

அந்த அறி­விப்­பி­னைச் செயல்­ப­டுத்­தும் வகை­யில், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், நேற்று முன்தினம் ஜூலை 15, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜரின் பிறந்த நாளில், திரு­வள்­ளூர் மாவட்­டம், கடம்­பத்­தூர் ஒன்­றி­யம், கீழச்­சேரி கிரா­மத்­தில் உள்ள புனித அன்­னாள் அரசு உதவி பெறும் தொடக்­கப் பள்­ளி­யில் முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டத்­தைத் தமிழ்­நாடு அர­சின் சார்­பில் தொடங்­கி­வைத்தார்.!

ree
ree

இதனை தொடர்ந்து தூத்துக்குடி வி. வி.டி. பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கவிஞர் கனிமொழிகருணாநிதி தொடங்கி வைத்து, பள்ளி மாணவ குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் உணவு அருந்தினார்!

தி.மு.கழக மாவட்டச்செயலாளர்கள், தமிழ்நாடு மகளீர் உரிமை - சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!

ree

இதே போல் திருச்சி மாவட்டம், பெரம்பலூர் பாராளமன்ற தொகுதிக்கும்

முசிறி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட ஜெயம் கொண்டான் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளிமாணவ குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து அருந்தினார்.!

ree

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி நா.தியாகராஜன், கலெக்டர் பிரதீப் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!


இத்­திட்­டத்­தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்­கப் பள்­ளி­ க­ளில் பயி­லும் 2 இலட்­சத்து 23


ஆயி­ரத்து 536 குழந்­தை­கள் பய­ன­டை­வார்­கள்.


முத­ல­மைச்­சரால், தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள அரசு மற்­றும் அரசு உதவி­ பெறும் தொடக்­கப் பள்­ளி­கள் அனைத்­தி­லும் செயல்­ப­டுத்­தப்­ப­டும் முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம் உல­கி­ற்கே முன்­னோ­டி­யான திட்­ட­மா­கத் திகழ்­கி­றது.!

என்பது குறிப்பிடதக்கது.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page