top of page
Search

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வருகை! பாசனத்திற்கு கல்லணையிலும் தண்ணீர் திறந்து வைக்கின்றார்! அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 14
  • 2 min read
ree

மணவை எம்.எஸ்.ராஜா@ச ராஜா மரியதிரவியம்.. தோகமலை ......


தஞ்சைமாவட்­டத்­தில் 15, 16 ஆகிய 2 நாட்­கள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா லின் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கி­றார். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் சிலை திறப்பு, அரசு சார்­பில் பய­னா­ளி­களுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் விழா உள்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­ க­ளில் அவர் கலந்து கொள்­கி­றார்.! அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை.!

ree

இந்த நிலை­யில் நேற்று தஞ்சை பழைய பேருந்து நிலை­யம் அருகே முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களின் சிலை அமை­யும் இடத்­தில் நக­ராட்சி நிர்­வா­கத்­துறை அமைச்­ச­ரும் மண்­டல பொறுப்­பா­ள­ரு­மான கே.என்.நேரு, உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் கோவி.செழி­யன் ஆகியோர் பார்­வை­யிட்டு ஆய்வு செய்­த­னர்.


சிலை அமை­யும் இடத்­திற்­கான மாதிரி வரை­ப­டத்தை பார்த்­த­னர். சிலை­யைச் சுற்­றி­லும் செய்ய வேண்­டிய பணி­கள் குறித்து ஆலோ­சித்­த­னர். தொடர்ந்து செய்­யப்­பட்­டுள்ள முன்­னேற்­பாடு பணி­கள் குறித்து சம்மந்தபட்ட அதி­கா­ரி­க­ளி­டமும் .தி.மு. கழ­கத்­தி­ன­ரி­ட­மும் அமைச்­சர்கள் கே.என்.நேரு, கோ.வி.செழியன் கேட்­ட­றிந்­த­னர்.

ree

மாவட்ட ஆட்சித்தலைவர், பா.பிரியங்கா பங்கஜம், காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் .ஜோஷி நிர்மல் குமார் , திருவையாறு சட்டமன்ற உறுப்பினர். துரை. சந்திரசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . இரா. இராஜாராம், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர். ஆர். தயாளகுமார், தஞ்சாவூர் கீழ்காவேரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர். எம். சண்முகம், திருச்சி நடுக்காவேரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் . எம். இளங்கோ, திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் , நித்தியானந்தம் உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார் . . யோகேஸ்வரன் . முருகானந்தம், மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.!

ree

முன்னதாக தி.மு.கழக முதன்மை செயலாளர், மத்திய மண்டல பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தி குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது

ree

முன்னோடித் திட்டங்கள் பல தந்து இந்திய நாட்டிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நம் கழக தலைவர் முதலமைச்சர் - தளபதியார், கல்லணையில் பாசனத்திற்குதண்ணீர் திறப்பு - இதனை தொடர்ந்து தஞ்சையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்த கொண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஜூன்.15.16. தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.!

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதல் அமைச்சர் தளபதியார் சாலை மார்க்கமாக வந்து

விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பூதலூர் வட்டத்திலுள்ள கல்லணையை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், சாலை மார்க்கமாக செல்லும் முதல் அமைச்சர் தளபதியார் தஞ்சை கலைஞர் அறிவாலயம் வழியாக பஸ்நிலையம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.!


அன்று இரவு தஞ்சையில் தங்கும் முதல் அமைச்சர் தளபதியார் மறுநாள் 16-ம் தேதி திருமணம் விழாவிலும், தொடர்ந்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தும். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றார். இதனையடுத்து மாலை சென்னை விமானம் மூலம் புறப்படுகின்றார்.


கழக தலைவர் - முதல் அமைச்சர் தளபதியார் கலந்து கொள்ளும் 2 நாள் நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னால் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அனைத்து சார்பு கழக அணியினரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page