top of page
Search

குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி! மகுதிகளில் தொழுகைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி! சரமாரியான கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 2, 2023
  • 2 min read

ree

குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி! மகுதிகளில் தொழுகைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி! சரமாரியான கேள்வி?


பள்ளிவாசல்களில் (Masjid) வெறும் 10 நிமிடங்கள் தான் தொழுகைக்காக அழைக்க பாங்கு (Azaan) ஒலிபரப்பப்படுகிறது. ஆனால் கோயில்களில் அதிகாலை முதலாக பல மணிநேரங்களுக்கு பாடல்களும், பஜனைகளும் அதிக சத்தத்தில் ஒலிபரப்பப்படுகின்றன.பாங்கு ஒலி உங்களுக்கு தொந்தரவு தரும் போது, கோயில் பாடல்கள் தொல்லையாகவும், ஒலி மாசாகவும் தெரியவில்லையா?" என்று குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.!

குஜராத் காந்திநகர் : பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பிற்கான பாங்கு ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.!

ree

மேலும், மசூதிகளில் ஒலிபரப்பப்படும் தொழுகையை விட கோயில்களில் ஒலிபரப்பப்படும் பஜனைகளும், பாடல்களும் தான் அதிக சத்தத்தை எழுப்புகின்றன. அது உங்களுக்கு தொல்லையாக இல்லையா? என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார்.!


குஜராத் தலைநகர் காந்திநகரைச் சேர்ந்த தர்மேந்திரா பிரஜாபதி என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் அண்மையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், மசூதிகளான பள்ளிவாசல்களில் நாளொன்றுக்கு 5 முறை பாங்கு ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுகிறது. அதிக சத்தத்தில் இது ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இது பொதுமக்கள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே, மசூதிகளில் தொழுகைகள் ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என அதில் கோரப்பட்டிருந்தது.!

ree

இந்த மனுவானது, குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், அனிருத்தா பி. மாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நவ.28, ல் விசாரணைக்கு வந்தது.!

அப்போது இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மனுதாரரை நோக்கி சரமாரியாக கேள்வியெழுப்பினார். அவர் கூறியதாவது:!


பள்ளிவாசல்களில் 10 நிமிடத்திற்கு மிகாமல் தான் பாங்கு சத்தம் ஒலிபரப்பப்படுகிறது. அதுவும் ஒரு மனிதரின் குரலில் தான் அது ஒலிக்கிறது. அதுவே உங்களுக்கு தொல்லையையும், ஒலி மாசுவையும் ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறுகிறீர்கள். சரி.. இருக்கட்டும். அப்படியென்றால், கோயில்களில் இசை வாத்தியங்களுடன் சத்தமாக பாடல்களும், பஜனைகளும் ஒலிபரப்பப்படுகிறதே.. அதை என்னவென்று கூறுவீர்கள்?


10 நிமிட தொழுகையே ஒலி மாசு ஏற்படுத்துகிறது என்றால், கோயில்களில் நீண்டநேரம் ஒலிபரப்பப்படும் பாடல்கள் ஒலி மாசை ஏற்படுத்தாதா?

ree

நீங்கள் ஒரு மருத்துவர். ஒலி மாசு என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அப்படியென்றால், அதற்கான ஆதாரம் எங்கே? ஒலி மாசை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு டெசிபல் ஒலி வேண்டும் என்பதையும், தொழுகைக்கு அழைப்பான பாங்கு சத்தம் எத்தனை டெசிபலில் ஒலிபரப்பப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிவித்திருக்க வேண்டாமா?

கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களும், பஜனைகளும் வெறும் அந்தக் கோயில் வளாகத்திற்குள் மட்டும் தான் கேட்கிறதா? அது யாருக்கும் அதிக சத்தமாக தெரிவதில்லையா?

ree

மசூதிகளில் தொழுகை ஒலிபரப்பப்படுவது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு சடங்கு. மேலும், வெறும் 5 முதல் 10 நிமிடத்திற்குள் மட்டுமே இது ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஒலி மாசு ஏற்படும் என்ற மனுதாரரின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.!


அதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page