முத்தமிழறிஞர் கலைஞரின் பாணி! அமைச்சரவையில் மாற்றமா? எனக்கு தகவல் இல்லையே! முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்!
- உறியடி செய்திகள்

- Aug 22, 2024
- 1 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம் .....
அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்கு தகவல் இல்லை! முத்தமிழறிஞர் கலைஞரின் பாணியில் நச் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.!
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்!.
முதல்வரின் உத்தரவுப்படி ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசரகால செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அவசரகால செயல்பாட்டு மையத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது.

தமிழ்நாடு முழுவதும் பேரிடர் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பிய பிறகு அதன் முடிவுகள் பற்றி கூறுகிறேன்.!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் வரவில்லை என்று, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பாணியில் தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறியது குறிப்பிடதக்கது.!




Comments