top of page
Search

கள்ளக்குறிச்சி அரசியல்எடுபட வில்லையோ! பாலாற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது! எடப்பாடி வலியுறுத்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 27, 2024
  • 1 min read
ree

தமிழக சட்டமன்ற கூட்டணி தொடரில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னெடுத்து சஸ்பெண்டுக்குள்ளான தமிழக எதிக்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாலாற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.!


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது......


பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீர் ஆதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

ree

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்-அமைச்சருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.

ree

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.!


எது எப்படியோ கள்ளக்குறிச்சியை மட்டும் வைத்துக் கொண்டில்லாமல தமிழகத்தின் நலனிலும் அக்கரை காட்டி அரசியலை இது போன்ற ஆக்கப்பூர்வ பணிகளுக்கும் சேர்த்து முன்னெடுத்தால் நல்ல அரசியல் ஆரோக்கியமே!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page