கனிமொழி கருணாநிதி பேச்சு! உலகத்தை பாதுகாக்கும் சக்தி மாணவர்கள் தான்! சாதி, மதம் கடந்து வர வேண்டும்!
- உறியடி செய்திகள்

- Jul 7, 2024
- 1 min read

உலகத்தை பாதுகாக்கும் சக்தி மாணவர்கள்தான்! சாதி, மத, பாகுபாடுகளை கடந்து வெளியே வர வேண்டும் கவிஞர் கனிமொழி கருணாநிதி அழைப்பு!.
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை, தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கவிஞர் கனிமொழி கருணாநிதி, ஜூலை,06 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ – மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.!
பின்னர் கனிமொழி
கருணாநிதி, எம்.பி. மாணவர்களிடம் கூறியதாவது:–

உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருக்கிறதோ அந்தத் துறையை தேர்ந்தெடுங்கள். அந்த துறைதான் உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களோடு வரப்போகிறது. பிடித்த துறையில்தான் நமக்குப் பிடித்த விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்ய முடியும். மற்றவர்களை பார்த்து துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி இருக்காது. நம்முடையஅறிவே ஆற்றல் ஆகும்.!
உலகத்தில் நிறைய அழகான விஷயங்கள் உள்ளன. அவை அத்தனையையும் உணரக்கூடிய மனிதர்கள்தான் முழுமை பெற்ற மனிதர்கள்.!
மாணவர்கள் மீது முழுமையான அக்கரை கொண்டு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த கொள்கையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் , வழியில், முதல்வர தளபதியின் தலைமையில் பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன் உதாரணமாக திகழுகின்றது.!

எதிர்கால தலைமுறைகளான, மாணவர்களாகிய நீங்கள் இந்த உலகத்தை பாதுகாக்கக்கூடிய வர்களாக, சாதி, மத பாகுபாடுகளில் இருந்து நீங்கள் வெளியே வந்து அனைத்து மக்களையும் நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.! உங்களுடைய குடும்பம் பெருமை கொள்ளும் வகையில், நம் நாட்டிற்கு சாதனைகள் பலவற்றை படைக்க வேண்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
இவ்வாறு கனிமொழி கருணாநிதி. எம்பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமிபதி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.




Comments