top of page
Search

கனிமொழி கருணாநிதி பங்கேற்பு!தூத்து குடி வடக்கு மாவட்ட தேர்தல் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 20, 2024
  • 2 min read

ree

தூத்­துக்­குடி நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணி­கள் தீவிரம்!

தூத்­துக்­குடி வடக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட சட்­ட­மன்ற தொகு­தி­கள் வாரி­யாக ‘இந்­தியா’ கூட்­ட­ணிக்­கட்சி செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் கவிஞர், கனிமொழி கருணாநிதி பங்கேற்பு! வடக்கு மாவட்­ட தி.மு.கழகச் செய­லா­ளர் தமிழக சமூக நல -மகளீர் நல உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா­ஜீ­வன் அறிக்கை!


நடை­பெற இருக்­கின்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தூத்­துக்­குடி நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் இந்­தியா கூட்­ட­ணிக்­கட்சி வேட்­பா­ள­ரின் வெற்­றிக்­கான பணி­கள் குறித்து தூத்­துக்­குடி வடக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட தூத்­துக்­குடி, விளாத்­தி­கு­ளம், கோவில்­பட்டி ஆகிய 3 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளுக்­கும் தொகுதி வாரி­யாக செயல்­வீ­ரர்­கள் கூட்­டங்­கள் நடை­பெற இருக்­கி­றது.!

ree

அதன்­படி தூத்­துக்­குடி சட்­ட­மன்­றத் தொகு­திக்­கான செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் மார்ச் 21. வியா­ழக்­கி­ழமை காலை சுமார்10.00 மணிக்கு தூத்­துக்­குடி 2-ம் கேட் அரு­கி­லுள்ள அபி­ராமி மஹா­லில் நடை­பெ­று­கி­றது.!


தொடர்ந்து விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற தொகு­திக்­கான செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் மார்ச், 21. வியா­ழக்­கி­ழமை மாலை 5.00 மணிக்கு எட்­டை­ய­பு­ரம் சாய்­க­ணேஷ் திரு­மண மண்­ட­பத்­திலும் நடை­பெ­று­கி­றது.!

கோவில்­பட்டி சட்­ட­மன்­றத் தொகு­திக்­கான செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் மார்ச் 21.வியா­ழக்­கி­ழமை மாலை 6.30 மணிக்குகோவில்­பட்டி, மந்­தித்­தோப்பு ரோட்­டி­லுள்ள சர்க்­கஸ் மைதா­னத்­தில் நடை­பெ­று­கி­றது.

அனைத்து செயல்­வீ­ரர்­கள் கூட்­டங்­க­ளுக்­கும் மாவட்­டச் செய­லா­ளர் என்ற முறை­யில் பி.கீதா­ஜீ­வ­னா­கிய நான் தலைமை தாங்­கு­கி­றேன். கழக துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்­கள் சிறப்­பு­ரை­யாற்­று­கி­றார்.!


கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் நாடா­ளு­மன்ற தொகுதி பொறுப்­பா­ளர் ஊர்­வசி அமிர்­த­ராஜ் எம்.எல்.ஏ., காங்­கி­ரஸ் கமிட்டி துணை தலை­வர் ஏ.பி.சி.வி.சண்­மு­கம், தி.மு.க சார்­பில் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜி.வி.மார்க்­கண்­டே­யன், மாந­கர மேயர் ஜெகன் பெர­ய­சாமி, மாந­கர செய­லா­ளர் எஸ்.ஆர்.ஆனந்­த­சே­க­ரன், கோவில்­பட்டி நகர செய­லா­ளர் கா.கரு­ணா­நிதி, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் என். ராதா­கி­ருஷ்­ணன், மாவட்ட அவை தலை­வர் ஜி.செல்­வ­ராஜ், மா.கம்யூ மாவட்ட செய­லா­ளர் கே.பி.ஆறு­மு­கம், இ.கம்யூமாவட்ட செய­லா­ளர் பி.கரும்­பன், ம.தி.மு.க மாவட்ட செய­லா­ளர் ஆர்.எஸ்.ரமேஷ், வி.சி.க.மாவட்ட செய­லா­ளர்­கள், முரு­கன், கணே­சன், இ.யூனி­யன், முஸ்­லீம் லீக் மாவட்ட தலை­வர் பி.மீராசா, மக்­கள் நீதி­மய்­யம் மாவட்­டச்செய­லா­ளர் ஜவ­ஹர், ரமேஷ், மனி­த­நேய மக்­கள் கட்சி மாவட்­டச் செய­லா­ளர் கயத்­தாறு அஸ்­மத், சமத்­துவ மக்­கள் கழ­கத்­தின் மாவட்­டச் செய­லா­ளர் பி.எம்.அற்­பு­த­ராஜ், தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்சி மாவட்­டச் செய­லா­ளர் என்.ஏ.கிதர்­பிஸ்மி, ஆதித்­த­மி­ழர் பேரவை மாவட்­டச் செய­லா­ளர் காயல் முரு­கே­சன், ஆதித்­த­மி­ழர் கட்சி மாவட்­டச் செய­லா­ளர் நம்­பி­ராஜ் பாண்­டி­யன் மற்­றும் கூட்­ட­ணிக்கு ஆத­ரவுதெரி­வித்­துள்ள அமைப்­பு­க­ளின் நிர்­வா­கி­கள் சட்­ட­மன்ற தொகுதி பொறுப்­பா­ளர்­கள் சிறப்­பு­ரை­யாற்­று­கின்­ற­னர்.!


எனவே அனைத்து செயல்­வீ­ரர்­கள் கூட்­டங்­க­ளி­லும் அந்­தந்த தொகு­திக்கு உட்­பட்ட இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள், செயல்­வீ­ரர்­கள், பொது­மக்­கள் அனை­வ­ரும் இத­னையே அழைப்­பாக ஏற்று பெருந்­தி­ர­ளா­கக் கலந்து கொள்ள கழகத் தலைவர், தமிழக முதல்வர் தளபதியார் காட்டிய வழியில் அன்­பு­டன் அழைக்­கி­றேன்.!


ஓரணியாய், அணிதிரள்வோம்! மகத்தான, மாபெரும் வெற்றியை நமதாக்குவோம்!


இவ்வாறாக கீதாஜீவன் கூறியுள்ளார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page