top of page
Search

ஆம்ஸ்ட்ராங் கொலை! வக்கீலுகளும் தொடர்பு! தொடரும் நடவடிக்கை! அதிமுக வக்கீலும் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 21, 2024
  • 2 min read
ree


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வக்கீலும்கவுன்சிலருமா வைரும் கைது செய்யப்பட்டாா்.!


கடந்த 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த ரெளடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் கடந்த 7-ஆம் தேதி என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.!


கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16-ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.!

ree

ஆற்றில் மீட்கப்பட்ட கைப்பேசிகள்: கைது செய்யப்பட்ட அருள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் கொலையாளிகள் பயன்படுத்திய 6 கைப்பேசிகளை பெற்று, அதை தனது நண்பா் திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 3-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினரான வக்கீல் ஜி.ஹரிதரன் (37) மூலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் ஹரிதரனை நேற்று சனிக்கிழமை பிடித்து விசாரணை செய்தனா். அதில், ஹரிதரன் அந்த கைப்பேசிகளை திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூா் கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்ததாக தெரிவித்தாா் என்கிற தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை அதிகபடுத்தியது.!


தொடா்ந்து தீயணைப்பு படையினா், ஆழ்கடல் நீச்சல் வீரா்களின் தேடுதல் பணி மூலம் ஆற்றிலிருந்து 3 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டதாக கூறப்படுகின்றது..


ஹரிதரனை கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனா்.!


இந்நிலையில் தலைமறைவாக உள்ள வட சென்னையைச் சோ்ந்த ஒரு ரெளடியும், தாம்பரத்தைச் சோ்ந்த ஒரு ரெளடியும் நேபாளம் வழியாக மலேசியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.!


இது தொடா்பாகவும் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.!


அதேவேளையில், சிறையில் உள்ள சென்னையைச் சோ்ந்த பிரபல ரெளடிதான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூல காரணம் என்கிற சந்தேகத்துடன்

சி.பி.சி.ஐ.டி போலீஸாா், அவரையும் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.!


இந்த வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருவேங்கடம் விசாரணையின் போது தப்ப முயன்றபோது இறந்துள்ளாா்.!

ree

: இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் ஹரிதரனை கட்சியிலிருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேற்று சனிக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!


சட்டம் படித்து பதிவு பெற்றவர்கள் சட்ட ரீதியிலான பயிற்சிகளை எடுக்க விரும்பாமல் இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது தமிழ்நாட்டை எங்கே கொண்டு போய் நிறுத்த பேகிறது என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.!

தமிழக தலைமை நீதியரசர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்கத்தான் செய்கிறது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page