top of page
Search

ஓங்கி ஒலித்த நீட் முறைகேடுகள்! விவாதிக்க அனுமதி மறுப்பு! திணறிப்போன இரு அவைகள்!நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 28, 2024
  • 1 min read
ree

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு துவங்குவதாக தகவல்.!

ree

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும் போது, மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலேவும், நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்.!

ree
ree

ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனை வழியுறுத்தி அமளி ஏற்பட்டதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியபோதும் அவையில் அமளி நிலவியது. இதனையடுத்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.!

ree
ree

நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே .தி.மு.கழக இரு அவைகளின் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட எதிர்கட்சியினரும் வலியுறுத்தினார். இதற்க்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்திகோஷம் எழுப்பினர்கள்.!


இதனையடுத்து ஜூலை 1 திங்கட்கிழமை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கபட்டதாக கூறப்படுகின்றது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page