top of page
Search

கள்ளக்குறிச்சி அருகே, சாராயம் காய்ச்சி தடபுடல் விற்பனை! அதிமுக நிர்வாகி கைது!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 26, 2024
  • 1 min read
ree

கள்ளக்குறிச்சி அருகே கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி சுரேஷ் என்கிற சுரேஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.!


.கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.! கல்வராயன்மலை அருகே உள்ள மணப்பாச்சி கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான அதிமுக பிரமுகர் சுரேஷ் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.!


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது கடந்த காலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளிள் இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டும் உள்ளார். இவர் அஇஅதிமுக விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்தவர். தற்போதும் அஇஅதிமுக.வில்தான் கட்சியில் தான் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.!


இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டாரத்தில் கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அதிமுக,வை சேர்ந்த சுரேஷ் சாராயம் காய்ச்சி விற்று வந்ததாக தெரிகிறது.

ree

தகவல் அறிந்த காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் காவல்துறையினர் சாராயம் காய்ச்சி விற்கும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட அதிமுக, வை சேர்ந்தசுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.! இதைத்தொடர்ந்து, நேற்று(ஜூன் 25) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக வும். எதிர்கட்சியினர் கற்பலருக்கும் இது போன்ற தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.!


அந்த பக்கம் தலைவன் எடப்பாடி போராட்டம்.!

இந்த பக்கம் கட்சி நிர்வாகி சாராயம் காய்ச்சி படுஜோர் விற்பனையா!

என்ன தலையை சுத்துதா?


விடுப்பா விடுப்பா அரசியல்ல இதெல்லாம் சகஜமோ!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page