top of page
Search

விபத்தில் முதல்வரான பழனிசாமி! சீமான் - ஹெச்,ராஜா! மக்கள் ஒதுக்கி தள்ளுவார்கள்!அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 21, 2024
  • 1 min read
ree

தோகமலை..

ச.ராஜா மரியதிரவியம்....


அதிமுக பழனிசாமி அடிப்படை அரசியல் தெரியாமல் ஒரு விபத்தில் முதல்வரானர்.!பாஜக ஹெச்.ராஜா ஒதுக்கித் தள்ளப்பட்டவர்! ஊடக வெளிச்சத்திற்காக பேசும் சீமான்! இவர்களைமக்கள் ஒதுக்கித்தள்ளுவார்கள்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்.!


அரியலூரில் மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது!


கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் ஆணை, வழிகாட்டு தல்கள் படி.தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.!


டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சார பேருந்துகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு தேவையான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.!


சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!

ree

அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.!


உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆக வேண்டும் என காத்திருக்கிறோம்.!


இது பற்றி முதல்வர் தளபதியார் தான் நடவடிக்கை எடுப்பார்.!


பாஜகவின் ஹெச்.ராஜாதான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர்.!


இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் அவரின் செயல்பாட்டை மக்கள் அறிவர். அதனால்தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார். ஹெச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்.!


பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர். அவர் அடிப்படை அரசியல் தெரியாமல் முதல்வரானார்.!


நாணயம் வெளியீடு என்பது ஓர் அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்த பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.!


திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.!

ree

பழனிசாமியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு கூட விழா எடுக்காமல் போனவர் என கழகத்தலைவர் முதல்வர் தளபதியார் தொடர்ந்து சொல்லி வருகிறார்.!


பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ச்ச மரம் கல்லடி படும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம். அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்!


இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page