top of page
Search

நூலிழையில் தப்பிய பழனிசாமி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 16
  • 1 min read
ree

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்.


மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவரை வரவேற்று வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே உயரத்தில் வைத்திருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது.


எடப்பாடி பழனிசாமி பயணித்த பிரசாரம் வாகனம் கடந்த மறுநொடியே அந்த பேனர் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page