நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Jun 3, 2024
- 1 min read

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தி.மு. கழகத் தலைவர் - – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது.!
வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.!
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. இ.டி.பி.பி.எஸ் (ETPBS, ) 2. சாதாரண தபால் வாக்கு.
அதற்குரிய வழிமுறைகளை உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.!
தபால் வாக்குகள் முதலில் எண்ண வேண்டும்!
எப்படி இ.வி.எம். (EVM) வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
கள் இ.வி.எம். ( EVM) இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை இ.வி.எம் ( EVM) இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.!
இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.!
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக ஆர்.ஓ. மேஜைக்கு ( RO Table-க்கு ) செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.!

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து ( வி.வி.பி.ஏ.டி.) VVPAT இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, இ.வி.எம் (EVM) இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.!
படிவம் 17 சி (C)-–இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.!
படிவம் 20–-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!
பிறகு, படிவம் 20–-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும்.!
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!




Comments