top of page
Search

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்! 50 அதிகாரிகள் மீது வழக்கு! கரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்ய வலியுறுத்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 30, 2024
  • 1 min read
ree

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.!

இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.!



அ.தி.­மு.க. ஆட்­சி­யில் பிர­தம மந்­திரி வீடு கட்­டும் திட்­டத்­தில் மெகா மோசடி நடை­பெற்ற நிலை­யில், இது­தொ­டர்­பாக 50 அதி­கா­ரி­கள் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

வீடு இல்­லாத ஏழை மக்­கள் வீடு கட்­டிக் கொள்­ளும் வகை­யில், ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­கள் இணைந்து பிர­தம மந்­திரி வீடு கட்­டும் திட்­டத்­தின் கீழ், 2 லட்­சத்து 77 ஆயி­ரம் ரூபாய் நிதி­யு­தவி அளித்து வரு­கின்­றன. இதில், 62 சத­வி­கித நிதி­யு­த­வியை மாநில அர­சும், 38 சத­வி­கித நிதியை ஒன்­றிய அர­சும் வழங்கி வரு­கின்­றன.!

ree

இந்­நி­லை­யில், முந்­தைய அ.தி.­மு.க. ஆட்­சி­யில் இந்த திட்­டத்­தில் மெகா மோச­டி­கள் அரங்­கேற்­றப்­பட்­டன. பல்­வேறு முறை­கே­டு­கள் செய்து, தகு­தி­யில்­லாத பய­னா­ளி­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்­கப்­பட்­டது இதன்­மூ­லம் அம்­ப­ல­மா­னது.

வீடு கட்­டா­த­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி, வீடு­கள் உள்­ள­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி, பணி­கள் முடிக்­கப்­பட்ட ஒவ்­வொரு கட்­டத்­திற்­கும் நிதி வழங்­கா­மல், அரை­கு­றை­யாக கட்­டப்­பட்டு முழுமை பெறாத வீடு­க­ளின் பய­னா­ளி­க­ளுக்கு நிதி­யு­தவி என எப்­ப­டி­யெல்­லாம் முறை­கே­டு­களை அரங்­கேற்ற முடி­யுமோ, அப்­ப­டி­யெல்­லாம் அரங்­கேற்றி அப்­போ­தைய அ.தி.­மு.க. ஆட்­சி­யா­ளர்­கள், அரசு பணத்தை கொள்­ளை­ய­டித்­த­னர்.!


எந்த வித சான்­று­க­ளை­யும் ஆய்வு செய்­யா­மல், கட்­டட பணி­களை நேரில் பார்­வை­யி­டா­மல் லஞ்­சம் பெற்று கொண்டு இத்­த­கைய முறை­கே­டு­க­ளில் அப்­போ­தைய அ.தி.மு.க. ஆட்­சி­யா­ளர்­க­ளின் அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர். இது­கு­றித்து லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றது. இந்­நி­லை­யில், இந்த மெகா மோசடி தொடர்­பாக ஏற்­க­னவே, நாகப்­பட்­டி­னம், திரு­வள்­ளூர் உட்­பட பல்­வேறு மாவட்­டங்­க­ளில் ஊரக வளர்ச்சி மற்­றும் பஞ்­சா­யத்து ராஜ் துறை­யின் அதி­கா­ரி­கள் மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.!

ree

இந்­தச்­சூ­ழ­லில் தற்­போது, இத்­து­றை­க­ளில் பணி­யாற்­றும் 50க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் மீது லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர். இவர்­க­ளுக்கு சம்­மன் அனுப்பி நேரில் வர­வ­ழைத்து விசா­ரணை நடத்த லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் திட்­ட­மிட்­ டுள்­ள­னர். இத­னால் முறை­கேடு அதி­கா­ரி­கள் கலக்­கத்­தில் உள்­ள­னர்.!


இதனையடுத்து கரூர் மாவட்டத்தில், கரூர், அரவாக்குறிச்சி, பரமத்தி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை, கடவூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் பல்வேறு முன முறைகேடுகளை மிக நூதன முறையில் நிகழ்த்தி, பல கோடி அரசு நிதிகளை மோசடி செய்துள்ளவும், இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு அமைப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.!


கவனிக்குமா அரசு! மக்களோடு நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page