top of page
Search

கலைஞரின் முரட்டு பக்தர்! முதல்வர்ஸ்டாலின் அன்பைபெற்றவர்! என்.பெரியசாமி நினைவு நாள்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 24, 2024
  • 1 min read
ree

­ முத்தமிழறிஞரின் கலைஞர் தனது முரட்டு பக்தன் என்று பாராட்டு பெற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்மதிப்பை பெற்ற என். பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு நாள். அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!



தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!


சிறு­வ­யது முதல் தி.மு.கழ­கத்­தில் இணைந்து வட்டப் பிர­தி­நிதி, மாவட் டப் பிர­தி­நிதி, பொதுக்­குழு உறுப்­பி­னர், பஞ்­சாலை தொழி­லா­ளர் முன்­னேற்ற சங்­கம், தன்­பாடு உப்பு சுமை மூடை தூக்­கும் தொழி­லா­ளர் முன்­னேற்ற சங்­கம் உள்­ளிட்ட 32 தொழிற்­சங்­கங்­க­ளுக்கு தலை­வர் அதனை தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டல்களோடு 1986 – ல் தூத்­துக்­குடி மாவட்­டம் தனி­யாக உத­ய­மான நாள் முதல் தன் இறு­திக் காலம் வரை ஒருங்­கி­ணைந்த தூத்­துக்­குடி மாவட்ட தி.மு.கழக செய­லா­ள­ராக பொறுப்­பேற்று திறம்­பட பணி­யாற்­றி­ய­வர் என்.பெரி­ய­சாமி.!

ree

1986 - ல் தூத்­துக்­குடி நக­ர­மன்ற தலை­வர், 1989, 1996 ஆண்­டு­க­ளில் 2 - முறை சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் என பதவி வகித்து தூ த்­துக்­குடி மாவட்­டத்­திற்கு எண்­ணற்ற நல்ல திட்­டப் பணி­களை கொண்டு வந்­த­வர்.!


முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞரால் தன்­னு­டைய ”முரட்டு பக்­தன்” என்று பாராட்­டப்­பட்­ட­வர். இன்­றைய கழக தலை­வர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், திராவிட மாடல் ஆட்சியின் எழுச்சி நாயகர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அன்பை பெற்­ற­வர்.!


தூத்­துக்­குடி வளர்ச்­சி­யின் நல­னில் அக்­க­றை­யு­டன் செய­லாற்றி மறைந்த என்.பெரி­ய­சாமி அவர்­க­ளின் 7 -ம் ஆண்டு நினைவு தினம் வரு­கிற மே 26 - ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று வரு­கி­றது.!

ree

அன்­றைய தினம் காலை 9.00 மணி அள­வில் தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் தூத்­துக் ­கு­டி­யில் உள்ள அவரது நினை­வி­டத்­தில் கழக நிர்­வா­கி­கள், செயல்­வீ­ரர்­கள், தொண்­டர்­கள் மலர் அஞ்­சலி செலுத்­தும் நிகழ்வு நடைபெறுகிறது!


தொடர்ந்து தூத்­துக்­குடி வடக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட அனைத்து முதி­யோர் இல்­லங்­கள், ஆத­ர­வற்­றோர் இல்­லங்­க­ளுக்கு மதிய உணவு வழங்­கப்­பட இருக்­கி­றது.!


இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் - அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகள், கழக சார்பு அணியினர் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.!


இவ்­வாறு அமைச்­சர் பி.கீதா­ஜீ­வன் தெரி­வித்­துள்­ளா

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page