மோடி ஆட்சியில் பல்லாயிரம் கோடி ஊழல்,சி.ஏ.ஜி அறிக்கை! அதிமுகவில் ஐ.பி.எல் மேட்ச்! தேனியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- உறியடி செய்திகள்

- Mar 25, 2024
- 4 min read

மோடி ஆட்சியில் பல்லாயிரம் கோடி ஊழல்! சி.ஏ.ஜி அறிக்கை! அதிமுகவில் கூட்டணி என்கிற பெயரில் ஐ.பி.எல், மேட்ச் தான் நடத்தப்படுகின்றது! தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்துஉதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தேனி நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் மக்கள் மத்தியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தேனி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.கழக. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் சேகரித்து பேசினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.!
தேனி நாடாளுமன்றத் தொகுதியில், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியான, `இந்தியா கூட்டணி’ சார்பில் கழகத்தின் வெற்றி வேட்பாளராக, நம் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிற தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரிக்கிற இந்தச் சிறப்பான பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திபதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.!
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் உசிலம்பட்டி பகுதிமக்கள் நம்மை ஏமாற்றி விட்டீர்கள். மறுபடியும் ஏமாற்றுவீர்களா? இப்போது மறுபடியும் ஏமாற்றினீர்கள் என்றால்,நாமும் நமது நாடுதான் ஏமாந்து போவோம்.!

நான் பார்த்த மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் தேனி தொகுதியில்தான் மிகப்பெரிய எழுச்சியும், ஆரவாரத்தையு
ம், உற்சாகத்தைக் காண்கிறேன்.!
ஆனால், இந்த தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.
அது என்ன சிறப்பு என்று உங்களுக்கே தெரியும். சென்ற முறை 2019- இல் 39 தொகுதிக்கு 38 தொகுதி வெற்றி பெற்றோம். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், தேனி நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் வெற்றி வாய்ப்பு கை நழுவியது.!
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, தங்க தமிழ்செல்வனை லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.!
புதிய கல்விக் கொள்கை மூலமாக, குலக்கல்வியை மறுபடியும் ஒன்றிய அரசு திணிக்கப் பார்க்கிறது. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். குலக்கல்வித் திட்டம் என்றால் அப்பா என்ன தொழில் செய்கிறாரோ அதைத்தான் குழந்தையும் செய்ய வேண்டும், !
படிக்கக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது. அப்பா செருப்பு தைத்தால், மகனும் செருப்பு தைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.!
இதுவரைக்கும் இந்த ஐந்து வருடத்தில் இந்தி, சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை.!
மோடி இங்கு வந்து நன்றாக வடை சுடுவார். வந்து பேசும்போது திருக்குறள் தமிழ் மொழி என்றெல்லாம் பேசுவார். ஆனால் யாருக்குமே புரியாது.!

அதே சமயம் இதுவரைக்கும் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.!
கல்வி உரிமை மொழியுரிமை ஆகியவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.!
2021-இல் தி.மு.கழகம் ஆட்சி பொருப்பேற்ற போது என்ன நிலைமை என்று உங்களுக்குத் தெரியும். கொரோனா பெருந்தொற்று. நாம் அனைவரும் வீட்டில் அடைந்து கிடந்தோம்.
மோடி என்ன செய்தார்? திடீரென்று, ‘எல்லோரும் வீட்டிற்கு வெளியே வாருங்கள், விளக்கை ஏற்றுங்கள், கை,தட்டு, எடுத்து வாருங்கள், ஒலி எழுப்புங்கள்.இப்படிச் செய்தால் கோவிட் பயந்து ஓடிவிடும்’ என்று சொன்னார்
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக நம் முதலமைச்சர்தான் தடுப்பூசி போட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த கோவிட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முதலாகச் சொன்னவர் நமது முதல்வர் தான்.!

அத்தகைய சூழலில், தன்னுரையும் பொருட்படுத்தாமல் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன், அவர்களை தைரியமூட்டும் வகையில், கோவிட் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு கோவிட் வார்டுக்குள் சென்
று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, தைரியமூட்டி, நோய் தொற்றிலிருந்து விரைந்து நலம் பெற வாழ்த்துக்களையும் கூறிய மனித நேயமிக்க ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் தளபதியார் தான்.!
பத்து வருட கால ஒன்றிய பா.ஜ.க அரசின் ஊழலைப் பற்றி, சி.ஏ.ஜி. என்ற அரசு அமைப்பு சொல்கிறது. ? வேலை, மாநில மற்றும் ஒன்றியஅரசுகளின் செலவுகளைத் தணிக்கைசெய்வது. சி.ஏ.ஜி. அமைப்பு தான்.! ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒன்றிய அரசு செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஆய்வுக்கு பின்னர் அறிக்கை தருவார்கள்.!
இப்போது அந்த சி.ஏ.ஜி. அமைப்பு, கடந்த 10 வருடத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாயை பொருப்பற்ற முறையில் கூடுதலாக ஒன்றிய அரசு செலவு செய்திருக்கிறது. அந்த ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்குக் கணக்குக் கிடையாது. என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.!
அந்த ஏழரை லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது, என்று தெரியவில்லை. ஒரு கிலோமீட்டர் ரோடு 18-25 கோடியில் -போடுவதற்கு பதிலாக மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு எவ்வளவு தெரியுமா செலவு கணக்கு காட்டி இருக்கிறது. தெரியுமா சுமார் 250, கோடி ரூபாய்!

இது மட்டுமல்ல. ‘ஆயுஷ்மன் பாரத்’ என்ற ஒரு திட்டம். இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று குறிப்பிட்ட ஒரே நம்பரிலிருந்து போய் இருக்கிறது. அதுமட்டுமல்ல, `பி.எம்.கேர்ஸ் ஃபண்ட்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் இதுவரைக்கும் 32 ஆயிரம் கோடி ரூபாயை பா.ஜ.க. வசூல் செய்திருக்கிறது. அது எங்கிருந்து, யார் யார் மூலம் எவ்வளவு தொகைகள் பெறப்பட்அதற்கும் கணக்குக் கிடையாது. யார் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.!
இப்போது ஐ.பி.எல்.மேட்ச் நடந்துகொண்டிருக்கிறது. அதில் நிறைய அணிகள் இருக்கின்றன. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் அணி போன்று நிறைய அணிகள் இருக்கின்றன. இவர்கள் இந்தியாவில் ஒரே குழுவில்தான் விளையாடுவார்கள். அது போலத்தான் (ஐ.பி.எல் தொடர்) அ.தி.மு.க.வும் ஒன்றுதான். இதில், டி.டி.வி அணி, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி, ஈ.பி.எஸ் அணி, மோடி அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன.!
என்ன, ஐ.பி.எல். போட்டியில் வீரர்கள் காசு வாங்கிக் கொண்டு விளை யாடுவார்கள். அதைத்தான் இப்போது அ.தி.மு.க. அணிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.!
நான் நேரில் வந்து இங்கு . உங்களிடம் பேசி கொண்டு இருக்கிறேன். நீங்களும் கேட்டு இருக்கிறீர்கள். கேட்டுவிட்டு கலைந்து போய் விடக்கூடாது.! நமது மாநிலத்தின் உரிமைகள், வாழ்வாதாரம், இனம், மொழி, கலாச்சாரங்களை காப்பற்ற வேண்டிய முக்கியத்துவமிக்க மான தேர்தல் இது.!
இதற்குப் பிறகு தலைவர் இன்னும் ஒரு வாரத்தில் நேரில் வந்து. உங்களை எல்லாம் சந்திப்பார். உங்களிடத்தில். அதிமுக, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைத்த துரோகங்கள் பற்றியெல்லாம் கூறுவார்கள்!

அடுத்த 19 ஆம் தேதி தேர்தல் 24 நாட்கள்தான் இருக்கின்றன. அடுத்த 24 நாட்கள், இந்தப் பிரச்சாரத்தை நீங்கள் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு வாக்காளராக நீங்கள் பிரித்து எடுத்துச் செல்ல வேண்டும். `இந்தப் பத்து வாக்காளருக்கு நான் பொறுப்பு’, `இந்த ஐந்து வீட்டிற்கு நான்பொறுப்பு’ என அனைவரையும் 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
நமது கூட்டணியின் வெற்றி வேட்பாளரை நீங்கள் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.!
நான் மாதம் இரண்டு நாள் தேனியில் வந்து உங்களுடன், உங்களுல் ஒருவனாக தங்குகிறேன்.!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 க்கு 40 தொகுதிகளிலும் நமது இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறப்போவது உறுதி.! அதே சமயம் எனக்கும் தலைவருக்கும், இந்த தேனி தொகுதி மிக மிக முக்கியம். அதை நீங்கள் உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும்! வருகின்ற ஜூன் 3 -ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்தநாள். ஜூன் 4 -ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
எனவே முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளாகிய நீங்கள் அத்தனை பேரும் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.!
ஜூன் 3- ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாள் பரிசாக தேனி தொகுதி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கழக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய முனைப்புடன் களப்பணியாற்ற வேண்டும். என்று
உங்களையெல்லாம் அன்போடு கேட்கிறேன். பாசத்தோடு கேட்கிறேன். உரிமையோடு கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன். இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால் தலைவரின் மகனாகக் கேட்கிறேன். இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாக கேட்கிறேன்.!


உதயசூரியன் சின்னத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பெருவாரியாக வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து , அவரை உங்களுக்காக பணியாற்ற நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.!
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா, தொகுதிப் பார்வையாளர் மாரியப்பன் கென்னடி, நகர கழகச் செயலாளர் தங்கபாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் சிவனாண்டி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் இள. மகிழன், இளைஞர் அணி அமைப்பாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.!
தொடர்ந்து, தி.மு.கழக இளைஞர் அணிச் செயலார், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சுட்டெரித்த வெயிலில், இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி கழக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பல்லாயிரககாணவர்கள்மத்தியில், கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, வாக்குகள் சேகரித்து பேசினார் !




Comments