top of page
Search

எளிய குடும்ப பெண்! கோவை மாநகர மேயரானார்! அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி நேரில் வாழ்த்து!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 6, 2024
  • 2 min read
ree

கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு சு.முத்துசாமி ஆகியோர் வாழ்த்துக்கள் கூறினார்கள்.!

ree

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார். கடந்த ஜூலை 3ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை தொடர்ந்து, மேயர் பதவி காலியானதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.!


தற்போது, கல்பனா ஆனந்தகுமார், 19வது வார்டு கவுன்சிலராக மட்டும் உள்ளார்.கடந்த ஒரு மாத காலமாக மேயர் பதவி காலியாக இருந்த நிலையில், புதிய மேயர் வேட்பாளர் யார்? என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று தி.மு.கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.!


அதன்படி, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி புதிய மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.!

ree

தொடர்ந்து கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் தி.மு.கழகம் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - சேலம் மாவட்ட பொருப்பு - தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர். கோவை மாவட்ட பொருப்பு - தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு - ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.!

ree

கூட்டத்தில் தி.மு,கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டல்கள், அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக 29,வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர்கள் கே. என் நேரு - சு.முத்துசாமி ஆகியோர் அறிவித்தனர்.!

ree

ரங்கநாயகிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள்.!


இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மேயராக தி.மு.கழக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.!

கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகியை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் 7-வது மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார்.


இதனையடுத்துகோயம்புத்தூர் மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று (06.08.2024) நடைபெற்ற மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.கே.ரங்கநாயகி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.!

ree

ஈரோடு மாவட்டதி.மு.கழக செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .சு.முத்துசாமி தேர்தல் நடத்தும் அலுவலர் - மாநகராட்சி ஆணையாளர் .மா.சிவகுரு பிரபாகரன் இணைந்து, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - நகராட்சி நிர்வாகம் - குழநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வெற்றிச் சான்றிதழ் மற்றும் செங்கோல் ஆகியவற்றை வழங்கி, மேயருக்கான இருக்கையில் அமர வைத்தார்.!


இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் திரு.நா.பழனிச்சாமி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக் அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.!

ree

மேயராகத்தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகி, கோவை கணபதி பகுதியை சேர்ந்த. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். தற்போதும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். இவர், 29வது வார்டு தி.மு.கழக செயலாளராக உள்ளார். பத்திரம் விற்ப னையாளராக பணி செய்து வருகின்றார். என்கிறதகவல்களும் வெளிவந்துள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page