கலைஞரின் மீது தனி பாசம்! குடும்ப நண்பர்! விஜயகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
- உறியடி செய்திகள்

- Dec 28, 2023
- 2 min read

முத்தமிழறிஞர் கலைஞரின் மீது தனி பாசமும், என்னிடம் குடும்ப நண்பராகவும் பழகிய விஜயகாந்துடன் கலைஞரின் வசனத்தில் திரைப்படத்தில் நானும் பங்கேற்றது நினைவில் மலர்கிறது. அவருடனா நட்பு என்றும் மாறாதது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இன்று (டி28-) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்,
பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, தி.மு.கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.!
தமிழுணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்துடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.
முதல்வர் ஸ்டாலின்
விஜயகாந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கல் செய்தியில்.....
‘அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.
குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞரின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து. தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன். கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த்தை கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்துடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.

நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும். ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையடுத்து, கோயம்பேட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக இளைஞர் நலன் விளையாட்டு சிறப்புத் திட்டச்செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர்- கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்
கலையுலகம் - அரசியல், இரண்டிலும் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை. என்று இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு, மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு. ஆயத்தீர்வைத் துறை, கோவை மாவட்ட பொருப்பு அமைச்சர் சு.முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியினருக்கும் ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து
பொது மக்கள் அஞ்சலிக்காக மறைந்த விஜயகாந்த்தின் உடல் அதிகாலை 6:00 மணி முதல் ஒரு பிற்பகல் 1.00 வரை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது.
தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்தின் உடல்
மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.




Comments