top of page
Search

நாதக-வுக்கு சோதனை மேல் சோதனையா? பாலியல் புகாரை தொடர்ந்து பரப்பு மோசடி புகார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 21, 2024
  • 2 min read
ree

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் 12 வயது சிறுமியை

தேசிய மாணவர் படையின் பயிற்றுநரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.!


இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிவராமனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக இவர் இந்த வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.!

ree

இந்த பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில், மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனைத் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். . இதற்கிடையே “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட சிவராமன் என்ற நபருக்கும் என்.சி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று சென்னையில் உள்ள என்.சி.சி. தலைமை இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.!


இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்து தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.!

மேலும் இதில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கவும் ஆணையிட்டுள்ளார். இந்த விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களில் அனைத்து விதமான நடவடிக்கையும் முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். என்பதும் குறிப்பிடதக்கது.!


இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு நிலப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரிடம் ரூ,36 லட்சத்திற்கும் மேல் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது


மேலும் போலியாக நீதிமன்ற உத்தரவைத் தயார் செய்து, நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் கணக்கு இருப்பது போல் போலி ரசீதும் தயார் செய்து ரூ.36.20,000 மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.!


இருந்தாலும் நாதக,வுக்கு இப்படி ஒரு சோதனை காலமா? கட்சியின் தலைமை முதல் - தள்ளாடுகிறதா? என்றும் பரப்பரபாக அரசியல் வட்டாரங்களில் .பேசப்படுகின்றது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page