top of page
Search

தொண்டர்கள் பலமே கழகத்தின் பலம்! தளபதியின் வழியில் உங்களோடுபணியாற்றுவேன்! அமைச்சர் நேரு உருக்கம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 26, 2024
  • 3 min read
ree

முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் வழியில் தொண்டர்கள் பலமே கழகத்தின் என, கழக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தளபதியார் காட்டுகின்ற வழியில் உங்களோடு கழகப் பணியினை தீவிரமாக முன்னெடுத்து பணியாற்றுவேன் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.!


திருச்சி கலைஞர் அறிவாலையத்தில் தி.மு.கழக, நிர்வாகிகள் - செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது.

இதில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல்த்துறை அமைச்சர்,கே.என்.நேரு யில் நடை­பெற்­றது கூட்­டத்­தில்

முன்­னிலை வகித்து பேசி­ய­தா­வது:–


நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­த­லில் திருச்­சி­யில் தி.மு.­கழகத்தின் ­வேட்­பா­ளர் தான் போட்­டி­யி­டு­வார் என்ற எதிர்­பார்ப்­பில் உழைத்­துக்­கொண்டு இருந்­த­போது, இத்­தொ­கு­தியை தோழ­மைக் கட்­சிக்கு கொடுப்­பது என்று தலைமை முடி வெ­டுத்­தது. தி.மு.க ழக தலை­மை­யின் உத்­த­ரவை ஏற்று மனம் நோகா­மல், முகம் சுளிக்­கா­மல், தொடர்ந்து கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளரை வெற்றி பெற செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக இர­வும் பக­லும், பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் பாடு­பட்டு சிறப்­பாக செய­லாற்­றிய நமது கழக தோழர்­கள் அனை­வ­ருக்­கும் மன­மார்ந்த நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.!

ree

அதே­போல பெரம்­ப­லூர் தொகு­தி­யில் நமது தோழர்­கள் எதை­யும் எதிர்­பா­ரா­மல் தொடர்ந்து அத்­தொ­கு­தி­யில் கடு­மை­யா­க­வும், சிறப்­பா­க­வும் பாடு­பட்­டீர்­கள். கழக தலைமையும்,நாங்­களும் உங்­க­ளுக்கு நிறைய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம். என்­றைக்­கும் நீங்­கள் சொல்­கிற பணி­களை தட்­டா­மல் செய்­ப­வ­னாக, எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களோடு கழகம் முன்னெடுக்கும் பணிகளில், கழகத்தலைவர் தளபதியாரின் காட்டுகின்ற வழியில் நான் இருப்­பேன். அது­போல நமது சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், நமது உள்­ளாட்சி பிர­தி­நி­தி ­க­ளும் இருப்­பார்­கள்.!


தமிழ்நாடு அனைத்து வகையிலும், முழு அளவில் வளர்ச்சி பாதையை நோக்கி வீறு நடை போட வித்திட்ட முத்தமிழறிஞர் தலை­வர் கலை­ஞ­ரின் 101 வது பிறந்­த­நாள் விழாவை நாம் சீரோ­டும் சிறப்­போ­டும் கொண்­டாட வேண்­டும்.!

திருச்சி மாவட்­டத்­தில் 402 ஊராட்­சி­கள் 2 ஆயி­ரம் கிரா­மங்­களாக உள்­ளன என்று என்னிடம் நமது மாவட்ட ஆட்­சி­யர் சொன்­னார்.!


அனைத்து பகு­தி­யி­லும் தலை­வர் கலை­ஞ­ரின் திரு­வு­ரு­வப்­ப­டத்தை வைத்து, அவ­ருக்கு மரி­யாதை செலுத்­து­வ­தோடு கழக தொண்­டர்­க ­ளுக்­கும், பொது­மக்­க­ளுக்­கும் நலத்­திட்ட உத­வி­களை தட்­டா­மல் வழங்க வேண்­டும்.!

ree

அதே­போல மாந­க­ரத்­தி­லும் வட்ட செய­லா­ளர்­கள் தலை­வர் கலை­ஞ­ரின் 101 வது பிறந்­த­நாள் விழாவை நலத்­திட்ட உத­வி­கள் வழங்கி கொண்­டாட வேண்­டும்.!

தலை­வர் கலை­ஞர் 40 ஆண்டு காலம் செய்த பணியை, நமது தலை­வர், திராவிட மாடல் ஆட்சியின் எழுச்சி நாயகர், தொண்டர்களின் பலமே கழகத்தின் என்பதற்கேற்ப முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் வழியில் பணியாற்றி வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்­தில் செய்து முடித்­துள்­ளார்.!


இந்­தி­யா­ ஒன்றியத்தின் அர­சி­யலில், எதிர் கட்­சி­களை இணைத்து இந்­தியா கூட்­ட­ணியை அமைக்­கக்­கூ­டிய வகை­யில் உயர்ந்­துள்­ளார்.!

இக்­கூட்­ட­ணி­யில் இருந்து நி­தீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனார்­கள்.

ஆனால் இந்­தியா கூட்­டணி ஒற்­று­மை­யாக இருக்க வேண்­டும் என உழைத்­த­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர் நமது தலை­வர் தளபதியார் என்பதை இந்திய ஒன்றியமும். உலகும் நன்கறியும்.

தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு எந்த பணி­யும் செய்­யாத பிர­த­மர் மோடியை இந்­தி­யா­வில் எதிர்த்து பேசிய முதல் முத­ல­மைச்­சர் நமது தலை­வர். தோழ­மைக் கட்­சி­கள் மத்­தி­யில் நமது கட்­சிக்கு மரி­யாதை பெற்று தந்­தி­ருக்­கி­றார்.!

ree

திருச்சி பஞ்­ச­பூ­ரில் கட்­டப்­பட்டு வரும் புதிய ஒருங்­கி­ணைந்த பேருந்து நிலை­யத்­திற்கு முன்­னாள் முதல்­ வர் கலைஞர் பெயரை வைக்க வேண்­டும். மிக உய­ர­மான கலைஞர் சிலை அமைக்க வேண்­டும் என தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ டுள்­ளது. தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரி­டம் இது­கு­றித்து பரிந்­துரை செய்ய இக்­கூட்ட தீர்­மா­னம் மூலம் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.!

இவ்­வாறு அமைச்­சர் கே.என்.நேரு பேசி­னார்.!


தொடர்ந்து கூட்டத்தில் ...

முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு நிறைவு விழாவை சிறப்­பாக கொண்­டா­டும் வகை­யில் திருச்சி மத்­திய, வடக்கு மாவட்­டத்­தில் உள்ள அனைத்து ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழ­கங்­க­ளில் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வ­ப் ப­டத்­திற்கு மாலை அணி­வித்து, கழக கொடி­யேற்றி, இனிப்­பு­கள் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்கி, மிக­சி­றப்­பாக கொண்­டா­டு­வது.!

ree

2024 நாடா­ளு­மன்றத் தேர்­த­லில் இந்­தியா கூட்­டனி உரு­வா­வ­தற்கு முழு­மு­தல் கார­ண­மாக திகழ்ந்­த­ வ­ரும் தமி­ழ­கத்­தில் திமுக மற்­றும் தோழ­மை­க் கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­கள் வெற்­றி­பெ­று­வ­தற்­காக தமி­ழ­கத்­தின் அனைத்து தொகு­தி­ க­ளி­லும் பிரச்­சா­ரம் செய்து மக்­க­ளின் மனதை கவர அய­ராது உழைத்த கழ­கத்­த­லை­வர் தமி­ழக முதல்­வர் தள­பதி அவர்­க­ளுக்கு திருச்சி மத்­திய மற்­றும் வடக்கு மாவட்ட தி.மு.­க­ழ­கத்­தின் சார்­பில் எங்­க­ளது நெஞ்­சார்ந்த நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­வது..!


நாடா­ளு­மன்றத் தேர்­த­லில் போட்­டி­யிட்ட இந்­தியா கூட்­ட­ணி­யில் உள்ள 40 வேட்­பா­ளர்­க­ளை­யும் ஆத­ரித்து தமி­ழ­கம் முழு­வ­தும் தனது பிரச்­சா­ரத்­தின் மூலம் வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றிக்கு வித்­திட்ட தி.மு.­க­ழ­கத்­தின் இளை­ஞ­ரணி செய­லா­ள­ர், தமிழக, விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை அமைச்­ச­ர் உத­ய­நிதி ஸ்டாலினுக்கு திருச்சி மத்­திய மற்­றும் வடக்கு மாவட்ட தி.மு.­க­ழ­கத்­தின் சார்­பில் தனது நெஞ்­சார்ந்த நன்­றி­யி­னை­யும், வாழ்த்­துக்­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­வது..!


தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்­க­ளும் வாழ்த்­தி­டும் வகை­யில் திரா­விட மாடல் ஆட்­சி­யின் நாய­கன் தள­பதி அவர்­க­ளின் முதல் மூன்று ஆண்­டு­கள் ஆட்சி நிறை­வ­டைந்து நான்­காம் ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­துள்ள தமி­ழ­க­ மு­தல்­வருக்கும் தமி­ழக அர­சுக்­கும் இக்­கூட்­டம் தனது நெஞ்­சார்ந்த நன்­றி­யி­னை­யும் வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.!


2024 நாடா­ளு­மன்றத் தேர்­

த­லில் இந்­தியா கூட்­டனி கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றி­காக அய­ராது உழைத்த மாவட்ட, மாந­கர, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் மற்­றும் கிளை கழக நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட கழக உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ருக்­கும் இக்­கூட்­டம் நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.

உள்ளிட்ட பல்வேறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டது.!


கூட்­டத்­தில்

கூட்­டத்­தில் அவைத்­த­லை­வர்­கள் அம்­பி­கா­பதி, பேரூர் தர்­ம­லிங்­கம், மத்­திய மாவட்டச் செய­லா­ளர் வைர­மணி, வடக்கு மாவட்ட செய­லா­ளர் காடு­வெட்டி தியா­க­ரா­ஜன் எம்­எல்ஏ, மாந­கர செய­லா­ள­ரும் மாந­கர மேய­ரு­மான அன்­ப­ழ­கன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பழ­னி­யாண்டி,ஸ்டாலின் குமார், ஊராட்சி குழு தலை­வர் தர்­மன் ராஜேந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஆனந்த், டோல்­கேட் சுப்­பி­ர­மணி, சேர்­மன் துரை­ராஜ், செவந்தி லிங்­கம் கரு­ணை­ராஜா, மாவட்ட துணைச் செய­லா­ளர் விஜயா ஜெய­ராஜ், கரு­ணா­நிதி முத்­துச்­செல்­வம் மயில்­வா­க­னன், தொமுச குண­சே­கர் காஜாமலை விஜி மற்றும்


அறங்­கா­வல் குழுத் தலை­வர் முரளி அண்­ணா­துரை, கே.கே.ஆர்.சேக­ரன்­, கி­ராப்­பட்டி செல்வம், புத்­தூர் தர்­ம­ராஜ், மாத்­தூர் கருப்­பையா, அந்­த­நல்­லூர் கதிர்­வேல், செல்­வ­ராஜ், பெரி­யய்யா, கோல்­டன் ராஜேந்­தி­ரன், வீரப்­பன், நாக­ரா­ஜன், ராம்­கு­மார், கமல், முஸ்­தபா, விஜ­ய­லட்­சுமி, கண்­ணன், துர்கா தேவி, கலைச்­செல்வி, சிங்­கா­ரம், வழக்­க­றி­ஞர்­கள் கவி­ய­ர­சன், சவ­ரி­முத்து, மணி­வண்ண பாரதி, அந்­தோணி, பவுல்­ராஜ், அபூர்வ மணி, உத்­த­மர்­சிலி, ராஜேந்­தி­ரன், முத்­துக்­கு­ மார், கலை, எம்.ஆர்.எஸ்.குமார், மதனா, கவிதா, தமி­ழ­ரசி, சுப்­பையா, பீம நகர் சதீஷ், தாஹிர், கருத்து கதி­ரே­சன் உள்­ளிட்­டோ­ரும் கலந்து கொண்­ட­னர்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page