உச்ச நீதிமன்றம் அதிரடி!பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் சரணடையவும் உத்தரவு!
- உறியடி செய்திகள்

- Jan 11, 2024
- 2 min read

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை ரத்து பா.ஜ.க.வுக்கு எதிராக கடிவாளமா? குற்றசாட்டப்பட்டவர்கள் சரணடையும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக மட்டும் விவாதிக்கப்படவில்லை.
அதே நாளில், 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குஜராத்தில் உள்ள கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.!
இந்நிலையில், (திங்கள் கிழமை), உச்ச நீதிமன்றம் இந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை மன்னிப்பதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டது.!
குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், அந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற மாநிலமான மகாராஷ்டிராவில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், குற்றம் நடைபெற்ற குஜராத் மாநில அரசு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.!
குஜராத் அரசு மீது எழுந்துள்ள கேள்வி
திங்கள்கிழமை வெளியான தீர்ப்பில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான கோரிக்கை மனுவை பரிசீலிக்க மகாராஷ்டிரா அரசுதான் பொருத்தமான அரசு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.!

இதற்குக் காரணம், ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, ஏழு குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதித்து, பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் அவர்களின் தண்டனையை குறைத்தது. இந்த இரண்டு முடிவுகளும் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டன.!
15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மேலும் 13 மே 2022 அன்று, உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளிப்பது குறித்து ஆராய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.!
இதற்குப் பிறகு, குஜராத் அரசு ஒரு குழுவை உருவாக்கியது. இந்த குழு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் தண்டனையை மன்னிக்க ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்து அவர்களை விடுவிக்க பரிந்துரைத்தது.
இறுதியாக, ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 11 குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.!
திங்களன்று, உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளின் மன்னிப்பு மற்றும் விடுதலையை உறுதி செய்வதில், குஜராத் அரசு 11 குற்றவாளிகளில் ஒருவருக்கு (ராதேஷ்யாம் ஷா) ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியது. அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தோல்வியடைந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தை ரகசியமாக அணுகி சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரினார்.!
நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, உண்மைகள் எவற்றையும் முன்வைக்காமல் தண்டனையை ரத்து செய்யக் கோரினார்!.
உண்மைகளை மறைத்தது தொடர்பாக இந்த குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியபோது, மீதமுள்ள 10 குற்றவாளிகளும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு குஜராத் அரசு தங்களுக்கு வழங்கிய அதே நிவாரணத்தை கோரினர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, குஜராத் அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.!
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பில்கிஸ் பானு கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்திவந்தார் என்பது குறிப்பிடதக்கது.!




Comments