top of page
Search

தூத்துக்குடி: மக்களை தேடி வருகிறார்! கனி மொழி கருணாநிதி எம்.பி! அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 14, 2024
  • 2 min read
ree

தூத்­துக்­குடி நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி பெற்­ற கனி­மொழி கரு­ணா­நிதி, எம்.பி தூத்­துக் ­குடி வடக்கு மாவட்­டத்­தில் ஜூலை 13,14,15 ஆகிய தேதி­க­ளில் மக்­களை நேரில் சந்­தித்து நன்றி தெரி­வித்து வருகிறார்!



இந்நிலையில் வடக்கு மாவட்­டச் செய­லா­ளர், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் . பி.கீதா­ஜீ­வன் வெளியிட்டுள்ள செய்து அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ree

நடந்து முடிந்த 2024.ம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­தி­யில் ‘இந்தியா’ கூட்­டணி சார்­பில் தி.மு.கழக. வேட்­பா­ள­ராக கனி­மொழி கரு­ணா­நிதி போட்­டி­யிட்டு, அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 5,40,729 வாக்­கு­கள் பெற்று வெற்றி பெற்­றார்.!

ree

எதிர்த்து போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­க­ள் அனைவரும் டெபா­சிட் இழந்­த­னர்.!

இந்நிலையில் தூத்துக்குடி

நாடாளு­மன்ற உறுப்­பி­னர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர் கனி­மொழி கரு­ணா­நிதி பல லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்த தூத்­துக்­குடி நாடா­ளு­மன்­றத் தொகுதி பொது­மக்­களை நேரில் சந்­தித்து நன்றி தெரி­விக்க, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கொள்கை வழியில், தி.மு.கழகத்தலைவர் தளபதியாரின் வழிகாட்டல்களின் படி, உங்களை நாடி, உங்களுல் ஒருவராக தேடி வரு­கி­றார்.!

ree

இதன்படி

வரு­கிற ஜூலை 13,14,15 ஆகிய தேதி­க­ளில் கோவில்­பட்டி, தூத்­துக்­குடி வடக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட தூத்­துக்­குடி, விளாத்­தி­கு­ளம் ஆகிய சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில் நாடாளுமன்ற உறுப்­பி­னர் கனி­மொழி கரு­ணா­நிதி பொது­மக்­களை நேரில் சந்­தித்து நன்றி தெரி­விக்க உள்­ளார்.!

ree

அதன்­படி நேற்று ஜுலை13. சனிக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு கோவில்­பட்டி சட்­ட­மன்றத் தொகு­திக்கு உட்­பட்ட வான­ர­முட்டி கிரா­மத்­தில் தொடங்கிய நன்றி அறி­விப்பு நிகழ்வு, தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கழு­கு­ ம­லை­யி­லும், மாலை 5.00 மணிக்கு வேலா­யு­த­பு­ரத்­தி­லும், மாலை 5.30 மணிக்கு செட்­டி­ கு­றிச்­சி­யி­லும், மாலை 6.00 மணிக்கு அய்­ய­னா­ரூத்­தி­லும், இரவு 6.30 மணிக்கு கயத்­தா­ரி­லும், இரவு 7.00 மணிக்கு அகி­லாண்­ட­பு­ரத்­தி­லும், இரவு 7.30 மணிக்கு கடம்­பூ­ரி­லும் இறு­தி­யாக இரவு 8.00 மணிக்கு காம­நா­யக்­கன்­பட்டி கிரா­மத்­தில் இன்றைய நன்றி அறி­விப்பு நிகழ்ச்சி முடி­வடைந்தது.!

ree

தொடர்ந்து மறுநாளான, இன்று 14.07.2024 ஞாயிற்­றுக்­கி­ழமை தூத்­துக்­குடி சட்­ட­மன்ற தொகு­தி­யில் நன்றி அறி­விப்பு நிகழ்ச்சி நடை­பெற உள்ளது. இன்­றைய தினம் மாலை 5.00 மணிக்கு பொட்­டல்­காடு கிரா­ மத்­தில் தொடங்கி, தொடர்ந்து முள்­ளக்­காடு, அத்­தி­ம­ரப்­பட்டி விலக்கு, முத்­தை­யா ­பு­ரம் பங்க் சந்­திப்பு, அய்­யன் கோவில் தெரு, தோப்­புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அரு­கில், சத்யா நகர், பக்­கிள்­பு­ரம் சந்­திப்பு, போல்­டன்­பு­ரம் கே.எஸ்.பி.எஸ். தியேட்­டர் அரு­கில், சிதம்­பர நகர் சந்­திப்பு, பிரை­யண்ட் நகர் 12வது தெரு மத்தி, பிரை­யண்ட் நகர் 12வது தெரு மேற்கு கட்­ட­பொம்­மன் நகர், வள்­ளி­நா­ய­க­பு­ரம் சந்­திப்பு, பிரை­யண்ட் நகர் 7வது தெரு மேற்கு, 3வது மைல், பாலி­டெக்­னிக் எதி­ரில் நன்றி அறி­விப்பு நிகழ்வு நிறைவு செய்யபடுகின்றது.!

ree

இது­போல தொடந்து நாளை ஜுலை 15. திங்­கள்­கி­ழமை அன்று விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற தொகு­தி­யில் மாலை 4.00, மணிக்கு குறுக்­குச் ­சா­லை­யில் தொடங்கி தொடர்ந்து வேட­நத்­தம், குளத்­தூர், வைப்­பார், வேம்­பார், சூரங்­குடி, அரி­ய­நா­ய­க­பு­ரம், விளாத்­தி­ கு­ளம், கரி­சல்­கு­ளம், நாக­லா­பு­ரம், சின்­ன­வ­நா­யக்­கன் ­பட்டி, புதூர் இறு­தி­யாக சிவ­லார்­பட்­டி­யில் நன்றி தெரி­விக்­கும் நிகழ்வு முடி­கி­றது.!

ree

மேற்­கண்ட இடங்­க­ளில் நடை­பெ­ற­வுள்ள நன்றி தெரி­விக்­கும் நிகழ்ச்­சி­யில் அந்­தந்த பகு­திக்கு உட்­பட்ட கழக நிர்­வா­கி­கள் சிறப்­பான வர­வேற்பு ஏற்­பா­டு­களை செய்­தி­ட­வும், ‘இந்தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள், கழ­கத் தோழர்­கள், அனைத்து பிரிவை சேர்ந்தவர் - மக்கள் பிரதிநிதிகள் அனை­வ­ரும் தவ­றாது கலந்து கொள்­ள­ மாவட்ட கழகத்தின் கேட்டுக் கொள்கிறேன்.!

ree

மேலும் பொது­மக்­கள் தங்­கள் பகு­தி­யில் உள்ள குறை­களையும், கோரிக்கைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி கருணாநிதியிடம் மனு­வாக எழு­திக் கொடுத்­தி­ட­வும், பயனடைந்திடவும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.!

இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page