top of page
Search

ஈரோடு, வருகிறார் உதயநிதி ஸ்டாலின் ! வரவேற்க அணிதிரள்வோம்! அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 14, 2023
  • 1 min read
ree


ஈரோட்டில் நவ, 17. ந் தேதி ஈரோட்டுக்கு வருகைதரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமுடனுடன் வரவேற்கவும், கழக விழா சிறப்புறவும் அனைவரும் திரளாக பங்கேற்போம் என்று அமைச்சர் சு.முத்துசாமி அழைப்புவிடுத்து பேசினார்.!



தி.மு.கழகத்தலைவர் . தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் வழிகாட்டலின்படி நவ.17. ந் தேதி வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள, பொற்கிழி வழங்கும் விழாவில், தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு-சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பாராட்டி சிறப்புறையாற்ற உள்ளார்.!

முன்னதாக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கின்றார் என்று தி.மு.க.வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றனர்!

ree

பொற்கிழி வழங்கும் விழா கூட்டத்தில் கலந்துகொள்ளபெருந்துறைக்குவருகை தரும் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை ,விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கே ற்கும், நடைபெற உள்ள பெருந்துறை திடலில் ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, விழாப் பணிகளை ஆய்வு

மேற்கொண்டார்,!

ree

பின்னர் விழா குறித்த ஒருங்கிணைந்த தி.மு.கழக மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது....!


தி.மு.கழகம்,எதிர்கட்சியாகயிருக்கும் காலத்திலேயே. நமது மாவட்டத்தில் கழகத் தலைவர் தளபதியார் கலந்துகொண்ட பல்வேறு விழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பான முறையில் நமது மாவட்டத்தில் நடத்தியுள்ளோம்.!

ree

வருகிற நவ 17-ந் தேதி கழக நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகைதரும், எதிர்கால தமிழ்நாட்டின் நம்பிக்கையாக திகழும். இளைய சமுதாயத்தின் எழுச்சிமிகு நாயகர், சின்னவரை வரவேற்க கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் அனைவரும் பெரும்திரளாக வருகை தர வேண்டும்.!


நமது மாவட்டத்தில், நமது சின்னவர் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகள் வரலாற்றுச் சிறப்புடையதாக அமைய முழு ஒத்துழைப்பு, அப்பணிப்புடன் பங்கேற்று, கழகத்தினர் பணியாற்ற வேண்டும்.!

ree

கழகத்தின் விழா நடைபெறும் பகுதியிலோ, பிற பகுதிகளிலோ, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறுகள் இல்லாத வகையில் அனைவரும் கண்காணிப்புடன் பணியாற்றி முழுஒத்துத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறாக வலியுறுத்தி பேசினார்.!


கூட்டத்தில் திமுக மாநில ,மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள். இளைஞரணி, மகளிரணி - உள்ளிட்ட சார்பு அணுகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page