top of page
Search

வெள்ளகாலத்தில் ஏன்?வரவில்லை! தேர்தல் பயத்தால் தமிழ்நாட்டை சுற்றிவரும் மோடி! கனிமொழி கருணாநிதி பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 22, 2024
  • 2 min read
ree

தமிழ்நாட்டில், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல்மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கபட்டுகின்ற போது எங்கே போனார் ? இன்றும் தேர்தல் பயத்தால் தமிழ்நாட்டை சுற்றும் மோடி! கனிமொழி கருணாநிதி பேச்சு!


தூத்­துக்­குடி மக்­க­ள­வைத் தொகு­தி­யில் தி.மு.கழகத்தின் சார்­பில் இரண்­டா­வது முறை­யாக, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி போட்டியிடுகிறார்.!


இந்நிலையில் தூத்­துக்­குடி சட்­ட­மன்ற தொகு­திக்­கான செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் தூத்­துக்­குடி 2 - ம் கேட் அரு­கி­லுள்ள அபி­ராமி மஹா­லில் நடை­பெற்­றது. மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு சமூக நலன் - மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.!


துணைப்பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி தலை­மை­யில் தூத்­துக்­கு­டி­ யில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணி­கள் குறித்து இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் பங்­கேற்ற செயல்­வீ­ரர்­கள் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.!

ree

கூட்டத்தில், இன்டியா கூட்டணி, தி.மு.கழக வேட்பாளர் கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி கலந்து பேசி­ய­தா­வது:!

முத்தமிழறிஞர் தலைவதி.மு கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையிலான திராவிட மாடல் , தமிழ்நாடு அரசு சார்பில் மக­ளி­ருக்கு புது­மைப்­பெண் திட்­டத்­தின் வழி­யாக உயர்­கல்வி படிக்க கூடிய பெண்­க­ளுக்கு நம்முடைய வீட்­டுக் குழந்­தை­ க­ளின் எதிர்­கா­லத்­திற்­காக ஆயி­ரம் ரூபாய் வழங்­கக்­கூ­டிய திட்­டம்.! மக­ளி­ருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கலை­ஞர் மக­ளிர் உரிமை தொகை என்று அறி­வித்து ஒரு கோடியே 15 லட்­சம் பேருக்கு மேல நம்­மு­டைய குடும்ப சகோ­த­ரி­கள் மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்­டத்தை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்ணன் தளபதி நமக்­காக வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்.

அமைச்­சர் கீதா ஜீவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், நினைபடுத்தியதைப் போல நான் வாரத்­துக்கு நான்கு நாள் தூத்­துக்­குடி தொகு­தி­யில் மக்களோடும், உங்களோடும் தான் இருக்­கி­றேன்.! இப்போது. எல்­லாம் பார்த்­தீங்­கன்னா பிர­த­மர் மோடி வந்து தமிழ்­நாட்­டில்­தான் வாரத்­துக்கு மூன்று நாள் இருக்­காரு, அத்தனை நாள் நாடாளு­மன்­றத்­திற்­குக் கூட போவ­தில்லை தமிழ்­நாட்­டுக்குவந்துகொண்டே இருக்­கி­றார். ஏனென்­றால் தேர்­தல் பயம் வந்­து­டுச்சு, தேர்­தல் ஜுரம் வந்­து­டுச்சு.!

ree

ree

தேர்தல் உள்நோக்கத்தோடும், சுயநலத்தோடும் இத்­தனை தடவை வறீங்­களே, தேர்தலில் எப்படியாவது ஒட்டு வாங்க வேண்­டும் என்று. இயற்கை சீற்றத்தால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் எங்­க­ளு­டைய மக்­கள் மழை, புயல்,வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட வீடு­களை இழந்து தவித்­துக் கொண்­டி­ருந்த பொழுது, தங்களின் எதிர்காலம், குடும்பத்தார்கள் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களும், ஆடு மாடு, வீடு வசால் என்று வீட்டிலிருந்த அத்­தனை சொத்­துக்­க­ளும், வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட போது, வாழ வழி இல்­லாமல் நிற்கதியாய், பிள்ளை குட்டிகளுடன், கண்ணீருடனும், துன்பம், துயரத்தோடும் அடுத்த வேளை உண­வுக்குக்கூட வழி­யில்­லா­மல் தவித்து நின்று கொண்­டி­ருந்த பொழுதும் சென்­னை­யி­லும் சரி, தூத்­துக்­கு­டி­யி­லும் சரி இப்­ப­டிப் பரி­த­வித்த அந்த அப்பாவி மக்­களை பார்த்து ஆறு­தல் சொல்ல கூட ஒரு முறை­யா­வது வந்­தாரா? இல்லை.!

ree

புயல். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம், துயரமறிந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பு, மக்களுக்கும் இது­வ­ரைக்­கும் இங்கே தரப்­பட்டி ருக்­கக்­கூ­டிய அதனை , உதவிகளும், நிவா­ர­ணங்களும், கடும் நிதி பற்றாக்குறையிருந்த போதும், பிரதமர் மோடித்­ தலைமையிலான ஒன்றிய அரசு எந்த நிதி வழங்காமல், கண்களையும், காதையும் மூடி மெளமாக இருந்த போதும் இத்தகைய உதவிகளை தந்­தது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தளபதி அண்ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்.!


இங்க இருக்­கக் கூடிய பிர­த­மர், ஒன்­றிய அர­சாங்­க­மும் வந்து பாத்­துட்டு போன அமைச்­சர்­க­ளும் மக்­க­ளுக்­காக டெல்­லி­யி­லி­ருந்து ஒரு ரூபா கூட தர­வில்லை, தமிழ்நாட்டிலிருந்து நம்ம கிட்ட இருந்து வசூல் பண்ண, பணம்காசு, ஜிஎஸ்டி போட்டு, இங்கே வரி போட்டு நம்­மி­டம் இருந்து வசூல் பண்ண காசு, பணம் நமக்­காக அவசர காலங்களில் கூட செல­வ­ழிக்­க­வில்லை, நம்­மு­டைய மக்­க­ளுக்கு கொடுக்காக வில்லை. ஆனால் தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நம்முடைய மக்களுக்கு வீடு கட்­டிக் கொடுத்­தது , பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 6 ஆயி­ரம் ரூபாய் கொடுத்­தது வாழ்வாதரத்தை இழந்த மக்களுக்கு ஆடு மாடு­க­ளுக்கும் சேர்த்து நிவா­ர­ணம் வழங்­கி­யது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தளபதியார்.!

வய­லில் எல்லா பயிர்­க­ளும் வீணா­கி­விட்­டது என்று கண்­ணீ­ரோடு நின்ற விவ­சா­யி­க­ளுக்கு, தாயன்போடு உத­விக்­க­ரம் நீட்­டி­யது நம்­மு­டைய முத­ல­மைச்­சர்.!

ree

அத­னால், திரும்­பத் திரும்ப இங்கே வந்து தமிழ்­நாட்­டில் ஒரு கால் வைத்து விட வேண்­டும் என்று அந்த எண்­ணத்­தோடு பிர­த­மரை திரும்­பத் திரும்ப அழைத்­துக்­கொண்டு வராங்க. அவர்களுக்கு ஒன்றே ஒன்­றைச் சொல்ல விரும்­பு­கி­றேன். நாங்­கள் கண்­ணீ­ரோடு நின்ற பொழுது நீளாத அந்­தக் கரத்­திற்கு, இன்று தமி­ழக மக்­கள்தன்­னு­டைய விரல்­களை நீட்டி வாக்­க­ளிக்க மாட்­டார்­கள் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும்,! அதை அவர்களுக்கு புரிய வைக்கவும் வேண்­டும்.!

இவ்­வாறு கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­னார்.!


தூத்­துக்­குடி மாந­க­ராட்சி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, தூத்­துக்­குடி மாந­க­ராட்சி துணை மேயர் ஜென்­னிட்டா, இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், சார்பு அணியினர், உட்பட தொண்­டர்­கள் உள்­ளிட்ட ஏராளமானோர் கலந்­து­கொண்­டார் கள்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page